NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பிஸ்லரி நிறுவனத்தை வழிநடத்தவிருக்கும் ரமேஷ் சௌஹானின் மகள் ஜெயந்தி சௌஹான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிஸ்லரி நிறுவனத்தை வழிநடத்தவிருக்கும் ரமேஷ் சௌஹானின் மகள் ஜெயந்தி சௌஹான்
    பிஸ்லரி நிறுவனத்தை வழிநடத்தவிருக்கும் ரமேஷ் சௌஹானின் மகள் ஜெயந்தி சௌஹான்

    பிஸ்லரி நிறுவனத்தை வழிநடத்தவிருக்கும் ரமேஷ் சௌஹானின் மகள் ஜெயந்தி சௌஹான்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 23, 2023
    03:41 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் முன்னணி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விற்பனையாளரான பிஸ்லரியை டாடா குழுமம் வாங்கவிருப்பதாகத் தகவல் வெளியானது.

    பிஸ்லரி நிறுவனத்தை உருவாக்கி 60 ஆண்டுகளாக அதனை நடத்தி வந்த ரமேஷ் சௌஹானும், பிஸ்லரி நிறுவனத்தை தான் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார்.

    பொதுவாக, இதுபோன்ற பெருநிறுவனங்களை தந்தைக்குப் பிறகு அவர்களது மகனோ அல்லது மகளோ தலைமைப் பொறுப்பேற்று முன்னின்று நடத்துவார்கள்.

    ஆனால், ரமேஷ் சௌஹானின் ஒரே மகளான ஜெயந்தி சௌஹானுக்கு பிஸ்லரி நிறுவனத்தின் நடத்தை விருப்பமில்லை எனத் தெரிவித்ததையடுத்து, அந்நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்தார் ரமேஷ் சௌஹான்.

    அதன் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்ட ஜெயந்தி சௌஹான் பிஸ்லரி நிறுவத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார்.

    வணிகம்

    7000 கோடி சாம்ராஜ்யத்தை ஏற்றுக் கொண்ட ஜெயந்தி சௌஹான்: 

    ரமேஷ் சௌஹானின் ஒரோ மகளான ஜெயந்தி சௌஹான் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பேஷன் துறையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, 24 வயதில் பிஸ்லரியின் டெல்லி அலுவலகத்தை தலைமைப் பொறுப்பை ஜெயந்தியிடம் வழங்கினார் ரமேஷ் சௌஹான்.

    2011-ல் பிஸ்லரியின் மும்பை அலுவலகத்தை கையில் எடுத்துக் கொண்ட ஜெயந்தி, அந்நிறுவனத்தின் பல்வேறு படிநிலைகளில் பணியாற்றியிருக்கிறார்.

    தற்போது அந்நிறுவனத்தின் புதிய பொருட்கள் மேம்பாட்டு பிரிவில் கவனம் செலுத்தி வரும் ஜெயந்தி சௌஹான் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.

    கடந்த மார்ச் மாதம் பிஸ்லரி நிறுவனத்தைக் கைப்பற்றும் முடிவில் இருந்து டாடா குழுமம் பின்வாங்கியதைத் தொடர்ந்து, அந்நிறுவத்தனை அடுத்து வழிநடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஜெயந்தி சௌஹான்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    வணிகம்

    ஐடிஎஃப்சி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் இணைப்பு அங்கீகரிப்பு  இந்தியா
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கிய ஃபிளிப்கார்ட் ஃப்ளிப்கார்ட்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 5 தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    "வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது", வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா வருமான வரி அறிவிப்பு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 17 தங்கம் வெள்ளி விலை
    கன்வார் யாத்திரை: ஹரித்வாரில் 30,000 டன் குப்பைகள் குவிந்துள்ளன உத்தரகாண்ட்
    எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு  மாநிலங்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025