NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்
    இந்திய ஏர்போர்ட்களில் வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்

    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 22, 2022
    10:59 am

    செய்தி முன்னோட்டம்

    விமானப் பயணிகள் நீண்ட வரிசையில் மடிக்கணினிகள், மற்றும் மின்னணு சாதனங்களை ஸ்கிரீனிங் செய்வதற்காக நிற்பதை தவிர்க்க, இந்தியா விமான நிலையங்களில், புதிய ஸ்கேனர்கள் பொறுத்தப்பட உள்ளது.

    இதனால், பிரயாணிகள் மின்னணு சாதனைகளை தனியே எடுத்து வைக்க வேண்டாம்.

    விமானப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளரான சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டியின் பணியகம் (பிசிஏஎஸ்), அடுத்த மாதத்திற்குள், புதிய தொழில்நுட்ப விதிமுறைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதில், மின்னணு சாதனங்களை அகற்றாமல், பேக்கேஜ் ஸ்கிரீனிங் செய்வதை பற்றி விளக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல விமான நிலையங்களில் ஏற்கனவே இந்த புதிய பேக்கேஜ் ஸ்கேனர்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில், பயணிகள் தங்கள் மின்னணு சாதனங்கள் அல்லது ஜாக்கெட்டுகளை தனியாக எடுத்துச் செல்லத் தேவையில்லை.

    புதிய ஸ்கேனர்கள்

    இந்திய ஏர்போர்ட்களில் வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்

    முதற்கட்டமாக, இந்த புதிய சோதனை இயந்திரங்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகர விமான நிலையங்களில் நிறுவப்பட்டு, அடுத்த வருடத்திற்குள் மற்ற விமான நிலையங்களைக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிக்கை கூறுகிறது.

    மற்ற நாடுகளைப் போலவே, கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், இந்தியாவிலும் விமானப் பயணம் அதிகரித்துள்ளது.

    இதனால், விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

    குறிப்பாக சென்ற வாரம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச டெர்மினல்களில், செக்-இன் மற்றும் பாதுகாப்பு சோதனைக்காக பயணிகள் மணிக்கணக்கில் வரிசையில் நின்றனர். இது பல விமான தாமதங்களுக்கும் வழிவகுத்தது.

    இந்த புது நடவடிக்கை, அதன் பிறகே வேகமெடுத்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025