NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்
    ஆட்டோ

    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்

    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்
    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 22, 2022, 10:59 am 1 நிமிட வாசிப்பு
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்
    இந்திய ஏர்போர்ட்களில் வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்

    விமானப் பயணிகள் நீண்ட வரிசையில் மடிக்கணினிகள், மற்றும் மின்னணு சாதனங்களை ஸ்கிரீனிங் செய்வதற்காக நிற்பதை தவிர்க்க, இந்தியா விமான நிலையங்களில், புதிய ஸ்கேனர்கள் பொறுத்தப்பட உள்ளது. இதனால், பிரயாணிகள் மின்னணு சாதனைகளை தனியே எடுத்து வைக்க வேண்டாம். விமானப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளரான சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டியின் பணியகம் (பிசிஏஎஸ்), அடுத்த மாதத்திற்குள், புதிய தொழில்நுட்ப விதிமுறைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், மின்னணு சாதனங்களை அகற்றாமல், பேக்கேஜ் ஸ்கிரீனிங் செய்வதை பற்றி விளக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல விமான நிலையங்களில் ஏற்கனவே இந்த புதிய பேக்கேஜ் ஸ்கேனர்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில், பயணிகள் தங்கள் மின்னணு சாதனங்கள் அல்லது ஜாக்கெட்டுகளை தனியாக எடுத்துச் செல்லத் தேவையில்லை.

    இந்திய ஏர்போர்ட்களில் வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்

    முதற்கட்டமாக, இந்த புதிய சோதனை இயந்திரங்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகர விமான நிலையங்களில் நிறுவப்பட்டு, அடுத்த வருடத்திற்குள் மற்ற விமான நிலையங்களைக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிக்கை கூறுகிறது. மற்ற நாடுகளைப் போலவே, கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், இந்தியாவிலும் விமானப் பயணம் அதிகரித்துள்ளது. இதனால், விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சென்ற வாரம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச டெர்மினல்களில், செக்-இன் மற்றும் பாதுகாப்பு சோதனைக்காக பயணிகள் மணிக்கணக்கில் வரிசையில் நின்றனர். இது பல விமான தாமதங்களுக்கும் வழிவகுத்தது. இந்த புது நடவடிக்கை, அதன் பிறகே வேகமெடுத்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    இன்று உலக தியேட்டர் தினம் 2023 : மேடை கலையின் முக்கியத்துவத்தை கொண்டாடுவோம் உலகம்
    இயக்குனர் ஷங்கர்- நடிகர் ராம்சரண் படத்தின் டைட்டில் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    விமானம்

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம் மன ஆரோக்கியம்

    விமான சேவைகள்

    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் தமிழ்நாடு
    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம் புதுச்சேரி
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன? தொழில்நுட்பம்

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023