NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 'மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை'களைக் கட்டமைக்கும் ஸ்வீடன்.. அப்படி என்றால் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை'களைக் கட்டமைக்கும் ஸ்வீடன்.. அப்படி என்றால் என்ன?
    மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளைக் கட்டமைக்கும் ஸ்வீடன்

    'மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை'களைக் கட்டமைக்கும் ஸ்வீடன்.. அப்படி என்றால் என்ன?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 08, 2023
    03:50 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கள் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பை மேம்படுத்த உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலையைக் கட்டமைக்கவிருக்கிறது ஸ்வீடன் அரசு. மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை என்றால் என்ன?

    எலெக்ட்ரிக் வாகனங்களே ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் என்றான பின்பு, அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம்.

    எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டில் முக்கியமான பிரச்சினையாகப் பார்க்கப்படுவது சார்ஜிங் தான். சார்ஜிங் செய்வதற்கு நிறைய நிலையங்கள் இருந்தாலும், வாகனம் சார்ஜ் ஆவதற்கு குறிப்பிட்ட நேரம் செலவாகிறது.

    நீண்ட தூரப் பயணங்களில் பயண நேரத்தையும் இவை வெகுவாக அதிகரிக்கும். எனவே, சார்ஜிங் செய்யும் நேரத்தைக் குறைக்க மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த கடந்த பல ஆண்டுகளாகவே அந்நாடு சோதனை செய்து வருகிறது.

    ஸ்வீடன்

    மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகள்: 

    இந்த மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் இயக்கத்தில் இருக்கும் போதே, வாகனங்கள் சார்ஜ் ஆகும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.

    ஏற்கனவே, வயர்களுடன் கூடிய இரண்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு இரண்டு மின்மயமாக்கப்பட்ட சாலைகளைக் கட்டமைத்திருக்கிறது அந்நாடு.

    தற்போது மூன்றாவது வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் புதிய நெடுஞ்சாலையைக் கட்டமைக்கவிருக்கிறது ஸ்வீடன்.

    2025-ம் ஆண்டு இந்த மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலையை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது அந்நாடு.

    இந்த புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் பட்சத்தில், அடுத்த 2035-ம் ஆண்டுக்குள் 3,000 கிமீ நீளத்திற்கு மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளைக் கட்டமைக்கும் திட்டத்தில் இருக்கிறது ஸ்வீடன்.

    மேலும், இந்தக் கட்டமைப்புகளுக்கான தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்காகவும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் கைகோர்த்திருக்கிறது ஸ்வீடன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு ஆட்டோமொபைல்
    இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை வாகனம்
    புதிய வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ 'கெருவா' எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2023; பாதுகாப்பு விதிமுறைகள் மோட்டார் வாகன சட்டம்

    ஆட்டோமொபைல்

    13 வயதில் ஆடி க்யூ3 சொகுசு காரை வாங்கிய குழந்தை நட்சத்திரம்! கார் உரிமையாளர்கள்
    ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்? கார் உரிமையாளர்கள்
    ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025