NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம்
    இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம்

    இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 29, 2023
    09:57 am

    செய்தி முன்னோட்டம்

    PLI போன்ற பல்வேறு திட்டங்களின் உதவியுடன், 2030-ம் ஆண்டிற்குள் இந்திய ஆட்டோமொபைல் துறையானது உலகளவில் மூன்றாவது இடத்தை அடையும் என அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது கனரக தொழிற்துறை அமைச்சகம்.

    இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் PLI (Production Linked Incentive) திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு.

    இந்திய ஆட்டோமொபைல் துறையில், ரூ.25,938 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளித்து வருகிறது மத்திய அரசு.

    2021 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து அறிய இன்று கனரக தொழிற்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தலைமையில் இன்று சந்திப்பு நடைபெறுகிறது.

    ஆட்டோமொபைல்

    ஆட்டோமொபைல் துறையில் PLI திட்டத்தின் செயல்பாடு: 

    இன்றைய சந்திப்பில் PLI திட்டத்தின் கீழ், வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் பங்குபெறவிருக்கின்றன.

    தற்போது வரை இத்திட்டம் எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை அளவிடுவதைக் கடந்து, இத்திட்டத்தின் கீழ் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதனை தெளிவுபடுத்துவதையும் இன்றைய சந்திப்பில் முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கிறது கனரக தொழிற்துறை அமைச்சகம்.

    மேலும், இத்திட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் மற்றும் சவால்கள் இருக்கின்றன என்பதனையும், அவற்றை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் இன்றைய சந்திப்பில் உரையாடவிருக்கின்றனர்.

    2028ம் ஆண்டிற்குள் இந்திய ஆட்டோமொபைல் துறையின் மதிப்பை ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. அதற்கு PLI போன்ற பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டிருக்கிறது கனரக தொழிற்துறை அமைச்சகம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்
    இந்தியா

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் டொயோட்டா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய கார் மாடல்கள் என்னென்ன? கார்
    இந்தியாவில் பேஷன் ப்ரோ மாடலின் விற்பனை நிறுத்தவிருக்கிறதா ஹீரோ? ஹீரோ
    'டாடா சுமோ', தங்கள் நிறுவன ஊழியரின் பெயரையே கார் மாடலுக்கு சூட்டிய டாடா டாடா மோட்டார்ஸ்
    இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனப் பயன்பாட்டில் 0.8% மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்

    இந்தியா

    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி  வெளியுறவுத்துறை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 24 தங்கம் வெள்ளி விலை
    சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கவிருக்கும் மத்திய அரசு வணிகம்
    சந்திரயான் 3: வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் உணர்ச்சிவசப்படும் காணொளி இணையத்தில் வைரல் சந்திரயான் 3
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025