NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம்
    இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம்
    ஆட்டோ

    இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    August 29, 2023 | 09:57 am 1 நிமிட வாசிப்பு
    இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம்
    இன்று நடைபெறுகிறது PLI திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டுக் கூட்டம்

    PLI போன்ற பல்வேறு திட்டங்களின் உதவியுடன், 2030-ம் ஆண்டிற்குள் இந்திய ஆட்டோமொபைல் துறையானது உலகளவில் மூன்றாவது இடத்தை அடையும் என அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது கனரக தொழிற்துறை அமைச்சகம். இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் PLI (Production Linked Incentive) திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. இந்திய ஆட்டோமொபைல் துறையில், ரூ.25,938 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளித்து வருகிறது மத்திய அரசு. 2021 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து அறிய இன்று கனரக தொழிற்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தலைமையில் இன்று சந்திப்பு நடைபெறுகிறது.

    ஆட்டோமொபைல் துறையில் PLI திட்டத்தின் செயல்பாடு: 

    இன்றைய சந்திப்பில் PLI திட்டத்தின் கீழ், வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் பங்குபெறவிருக்கின்றன. தற்போது வரை இத்திட்டம் எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை அளவிடுவதைக் கடந்து, இத்திட்டத்தின் கீழ் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதனை தெளிவுபடுத்துவதையும் இன்றைய சந்திப்பில் முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கிறது கனரக தொழிற்துறை அமைச்சகம். மேலும், இத்திட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் மற்றும் சவால்கள் இருக்கின்றன என்பதனையும், அவற்றை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் இன்றைய சந்திப்பில் உரையாடவிருக்கின்றனர். 2028ம் ஆண்டிற்குள் இந்திய ஆட்டோமொபைல் துறையின் மதிப்பை ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. அதற்கு PLI போன்ற பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டிருக்கிறது கனரக தொழிற்துறை அமைச்சகம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆட்டோமொபைல்
    இந்தியா

    ஆட்டோமொபைல்

    2045க்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை கொண்ட நிறுவனமாக மாற டாடா மோட்டார்ஸ் இலக்கு டாடா மோட்டார்ஸ்
    இந்தியாவில் தங்களுடைய விலையுயர்ந்த கார் மாடலை வெளியிட்டிருக்கும் போர்ஷே போர்ஷே
    புதிய அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹீரோ ஹீரோ
    எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன? எலக்ட்ரிக் வாகனங்கள்

    இந்தியா

    'அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி': ரிலையன்ஸ் ஜியோவின் மிகப்பெரும் வாக்குறுதி  ரிலையன்ஸ்
    வரும் சனிக்கிழமை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1: இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு  இஸ்ரோ
    பிஎஸ்ஏ சேலஞ்சர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்றார் வேலவன் செந்தில்குமார் தமிழ்நாடு
    'அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஆராய விரும்புபவன் நான்': இஸ்ரோ தலைவர் சோமநாத் இஸ்ரோ
    அடுத்த செய்திக் கட்டுரை

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023