LOADING...
கிராண்ட் விட்டாரா வாகனங்களில் கோளாறு; 39,506 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுஸூகி அறிவிப்பு
கிராண்ட் விட்டாரா வாகனங்களில் கோளாறு; 39,506 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு

கிராண்ட் விட்டாரா வாகனங்களில் கோளாறு; 39,506 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுஸூகி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2025
04:21 pm

செய்தி முன்னோட்டம்

மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் (MSIL), சந்தையில் விற்பனை செய்யப்பட்ட தனது பிரீமியம் ரக கிராண்ட் விட்டாரா (Grand Vitara) எஸ்யூவி கார்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறு காரணமாக அவற்றை திருப்பிப் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின்படி, டிசம்பர் 9, 2024, முதல் ஏப்ரல் 29, 2025 வரை உற்பத்தி செய்யப்பட்ட 39,506 கிராண்ட் விட்டாரா யூனிட்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் உள்ள எரிபொருள் அளவு காட்டி (Fuel Level Indicator) மற்றும் எச்சரிக்கை விளக்கு அமைப்பு ஆகியவற்றில் கோளாறு இருக்கலாம் என்று மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது. இந்தக் குறைபாடு காரணமாக, வாகனத்தில் மீதமுள்ள எரிபொருள் அளவை ஸ்பீடோமீட்டர் துல்லியமாகக் காட்டாமல், ஓட்டுநர்களைத் தவறாக வழிநடத்த வாய்ப்புள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்பதால், நிறுவனம் இந்தக் குறைபாட்டைத் தடுப்பு நடவடிக்கையாக உடனடியாகச் சரி செய்ய முன்வந்துள்ளது. மாருதி சுஸூகி நிறுவனம், பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு, அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு வந்து, கோளாறுடைய பாகத்தைச் சோதனை செய்து, இலவசமாக மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தும். இந்தச் சேவைக்கு உரிமையாளர்களிடமிருந்து எந்தச் செலவும் வசூலிக்கப்படாது என்று நிறுவனம் உறுதி அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனப் பாதுகாப்பை உறுதிசெய்ய, டீலர்களின் தகவல்தொடர்புகளுக்கு விரைவாகப் பதிலளிக்குமாறு மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.