NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பெண்கள் தின பேரணியை தடை செய்த பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்கள் தின பேரணியை தடை செய்த பாகிஸ்தான்
    படத்தில்: "அடிப்படை உரிமைகள் சலுகை அல்ல"

    பெண்கள் தின பேரணியை தடை செய்த பாகிஸ்தான்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 04, 2023
    07:33 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் உள்ள அதிகாரிகள் சர்வதேச மகளிர் தின பேரணிக்கு அனுமதி தர மறுத்துள்ளனர்.

    பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று பாகிஸ்தானில் இரண்டு வெவ்வேறு குழுக்களால் பேரணிகள் நடத்தப்படும்.

    பெண் உரிமை குழுக்களால் நடத்தப்படும் பேரணிகள் மனித உரிமை கோரிய பேரணிகளாக இருக்கும்.

    மற்றொரு பேரணி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மதக்குழுக்களால் செய்யப்படும் 'ஹயா'(அடக்கம்) எனப் பெயரிடப்பட்ட எதிர்ப்பு பேரணிகளாகும்.

    மகளிர் தின பேரணியில் வைக்கப்பட்டிருக்கும் "சர்ச்சைக்குரிய பேனர்கள் மற்றும் பாதுகாப்புக் கவலைகளை" மேற்கோளிட்டு பெண்ணுரிமை பேரணிகளுக்கு லாகூர் நகர அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால், மகளிர் தின எதிர்ப்பு பேரணிகளுக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான்

    அடிப்படை உரிமைகளுக்காக போராடும் பெண்கள்

    "இது ஒரு உரிமை மீறல். இது இரு குழுக்களுக்கும் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமையை நிர்வகிக்கும் மாநிலத்தின் திறனைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது." என்று லாகூர் பெண்ணுரிமை பேரணியின் தலைவர் ஹிபா-அக்பர் கூறியுள்ளார்.

    பெண்களுக்கு ஆதரவாக பேரணி செய்யும் குழுக்கள் அடிக்கடி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதால்,அவர்கள் நீதிமன்றத்தை அடிக்கடி நாடவேண்டிய நிலை பாகிஸ்தானில் நிலவி வருகிறது.

    பெண்ணுரிமை கோருபவர்கள் மேற்கத்திய பழக்கவழக்கங்களை பின்பற்றுகின்றனர் என்றும் அவர்கள் கலாச்சார உணர்வுகளை அவமதிப்பதாகவும் அவர்கள் மீது தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது.

    மதத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி நூற்றுக்கணக்கான பெண்கள் ஆண்டுதோறும் பாகிஸ்தானில் ஆணவ கொலை செய்யப்படுகின்றனர்.

    பாகிஸ்தானில் அடிப்படை உரிமைகளுக்காக பெண்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அங்குள்ள ஆண்கள் தங்களுக்கு எதிராக பல வன்முறைகளை செய்கிறார்கள் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! தொழில்நுட்பம்

    உலகம்

    ரஷ்யா அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது மிகப்பெரும் தவறு: ஜோ பைடன் அமெரிக்கா
    இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது: பில் கேட்ஸ் புகழாரம் இந்தியா
    புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு - சீனாவின் புதிய திட்டம் சீனா
    இன்றோடு வாட்ஸ்அப்-க்கு 14 வயது! உருவான சுவாரசிய கதை வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025