NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா?
    நிகர புலம்பெயர்ந்தோர் வித்தியாசத்தை குறைக்க, பிரிட்டன் அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா?

    எழுதியவர் Srinath r
    Dec 13, 2023
    03:34 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த வாரம் அந்நாட்டு அரசு விசா நடைமுறைகளில் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

    வேலை தொடர்பான விசா பெற, ஊதியத்தை இரண்டு மடங்கு வரை அதிகரித்த அந்நாட்டு அரசு, சுகாதார சேவைகளில் பணிபுரிபவர்கள், தங்களது விசாவில் குடும்பத்தினரை பிரிட்டனுக்குள் அழைத்து வர தடை விதித்தது.

    அதேபோல், ஜனவரி 2024 முதல், ஆராய்ச்சி அல்லாத படிப்புகளில் சேரும் வெளிநாட்டு முதுகலை மாணவர்கள், இனி குடும்ப உறுப்பினர்களை ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு (யுகே) அழைத்து வர முடியாது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது, அங்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களை எந்த வகையில் பாதிக்கும் என்பதை, சற்று விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    2nd card

    2024 ஜனவரி அமலாகும் புதிய விதிகள் யுகே செல்லும் மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்?

    இந்தக் கொள்கை மாற்றம், இந்தியாவில் இருந்து யுகேவிற்கு மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்களை, தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கலாம்.

    சார்ந்திருப்பவர்களைக்(Dependents) அழைத்து வர முடியாதது, இங்கிலாந்தை மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான இடமாகக் கருதுவதை தடுக்கலாம்.

    இருப்பினும், மற்ற உலக நாடுகள் போல் அல்லாமல் யுகேவில் பெரும்பான்மையான படிப்புகள், ஒரு வருடத்திற்குள் முடிவடைவதால், மாணவர்கள் படிக்க செல்வதில் இது குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

    3rd card

    'சார்ந்தவர்' என்று கூறப்படும் நபர்கள் யார்?

    'சார்ந்தவர்' என்பதன் வரையறை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மாறுபடுகிறது. மேலும் இது பொதுவாக குடியேற்றம் மற்றும் விசா விதிமுறைகளால் தீர்மானிக்கப்படுகிறது.

    யுகேவை பொறுத்தவரை, 'சார்ந்தவர்' பொதுவாக குடும்ப உறுப்பினர் என வரையறுக்கப்படுகிறார். அவர் தனது நிதி உதவிக்காக, முதன்மை விசா வைத்திருப்பவரை நம்பி அவர்களுடன் இங்கிலாந்தில் வசிக்க அனுமதிக்கப்படுகிறார்.

    இதில், மனைவி, திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் துணை(unmarried partner), 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் அடங்கும்.

    குறிப்பிட்ட விசா வகையைப் பொறுத்து, சில சந்தர்ப்பங்களில், முதியவர்களுக்கும், 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும் சார்ந்தவர் விசா வழங்கப்படுகிறது.

    4th card

    திருத்தப்பட்ட விதியின் கீழ் சார்ந்திருப்பவர்களுக்கு என்ன உரிமைகள்/பயன்கள் கிடைக்கும்?

    சார்ந்து இருப்பவர்களுக்கான உரிமைகள் அல்லது பயன்கள் குறிப்பிட்ட விசா வகையை பொறுத்து மாறுபடும் என்றாலும், அனைத்து விசா வகையினரும்,

    சட்டப்பூர்வ குடியேற்றம், தேசிய சுகாதார சேவைகள் (NHS) மூலம் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல், வயது வந்தோருக்கான வேலை உரிமைகள், சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கான கல்விக்கான அணுகல்,

    முதன்மை விசா வைத்திருப்பவரின் விசா செல்லுபடியாகும் வரை, யுகேவிற்கு உள்ளும், வெளியவும் பயணிக்கும் உரிமைகளை அவர்கள் பெற முடியும்.

    சார்ந்திருப்பவர்களின் விசா காலம், முதன்மை விசா வைத்திருப்பவர்களின் விசா காலத்தை பொறுத்து அமைகிறது.

    இருப்பினும் தற்போது திருத்தப்பட்ட வீதியில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம் என்பதால், யுகே உள்துறை அமைச்சகத்தின் மூலம் அதை தெரிந்து கொள்வது நல்லது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    விசா
    இந்தியா
    இந்தியர்கள்

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    இங்கிலாந்து

    ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் சாதனைகள் கிரிக்கெட்
    சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் 18 பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர்கள் விளையாட்டு வீரர்கள்
    மாறுபாடு அடைந்த புதிய வகை 'எரிஸ்' கொரோனா - உலக சுகாதார அமைப்பு தகவல்  கொரோனா
    'நான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்' - இங்கிலாந்து பிரதமர் சிறப்புரை  பிரதமர்

    விசா

    அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா
    கனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா  கனடா
    புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை அமெரிக்கா
    கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா கனடா

    இந்தியா

    மிக்ஜாம் புயலால் 200 டேபிள் டென்னிஸ் வீரர்கள் விஜயவாடாவில் தவிப்பு டேபிள் டென்னிஸ்
    இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் தேதி டிசம்பர் 8க்கு பிறகு அறிவிப்பு மல்யுத்தம்
    சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்றதா அப்பல்லோ மருத்துவமனை? வலுக்கும் குற்றச்சாட்டுகள்  அப்பல்லோ
    முக்கிய அரசியல் தலைவர் சுட்டு கொலை: ராஜஸ்தானில் பரபரப்பு போராட்டங்கள், கடையடைப்பு  ராஜஸ்தான்

    இந்தியர்கள்

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை அமெரிக்கா
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025