NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா
    வெள்ளத்தில் மூழ்கிய பாகிஸ்தான்

    பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா

    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023
    12:48 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பருவக்கால மழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு பல சேதங்களை ஏற்படுத்தியது.

    முறையே, பாலங்கள், சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் நீரில் அடித்துச்செல்லப்பட்டது. 3.3 கோடி பேர் நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் வெள்ளப்பாதிப்பால் காயமடைந்தனர்.

    இந்த இக்கட்டான சூழலில் பாகிஸ்தான் உலகநாடுகளின் உதவியை எதிர்பார்த்தது.

    இதனையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியான பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க நாட்டின் வெளியுறவு மந்திரி அந்தோணி பிலிங்கனை அமெரிக்க வாஷிங்டன் நகரில் சந்தித்து நிதி உதவி அடிப்படையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதற்கு பின்னர், முதல்கட்டமாக வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையில் அமெரிக்கா பாகிஸ்தானிற்கு நிதியை ஒதுக்கியது.

    $100 மில்லியன்

    வெள்ளத்தில் 1739க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - வெள்ளத்திற்கு பிறகு பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட மக்கள்

    பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் கிட்டத்தட்ட 1,739க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    வெள்ளத்திற்கு பின்னர் பல நோய் பாதிப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி, 1.34லட்சம் பேர் வயிற்று போக்காலும், 44 ஆயிரம் பேர் மலேரியா வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல் வியாதியாலும், 101 பேர் பாம்பு கடியாலும், மேலும் 500 பேர் நாய் கடியாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் அமெரிக்கா மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலக செய்திகள்

    சமீபத்திய

    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! தமிழ்நாடு
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! பயனர் பாதுகாப்பு
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025