NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு
    2022இல், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 44,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்

    அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 24, 2023
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் அயோவா மாகாணங்களில் நேற்று(ஜன 24) நடந்த மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இரண்டு மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

    கலிபோர்னியாவில் நடந்த வெறித்தனமான துப்பாக்கி சூடு நடைபெற்று 2 நாட்கள் கூட முடியாத நிலையில் இது நிகழ்ந்திருப்பது அச்சத்தை கிளப்பி இருக்கிறது.

    இந்த சம்பவங்களின் சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கடைபிடிக்கப்படாமல் இருப்பதால், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சாதாரணமாகி வருகின்றன.

    கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 647 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

    2022இல், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 44,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவர்.

    அமெரிக்கா

    கலிபோர்னியாவில் நடந்த இரு துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்

    மூன்று சம்பவங்களில், இரண்டு வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஹாஃப் மூன் பேயின் பண்ணைகளில் நடந்துள்ளன. ஒரு சம்பவம் அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள ஒரு பள்ளியில் நடந்திருக்கிறது.

    மவுண்டன் மஷ்ரூம் பண்ணை மற்றும் ஹாஃப் மூன் பேயில் உள்ள ரைஸ் டிரக்கிங்-சாயில் பண்ணை ஆகியவற்றில் நடந்த தாக்குதல்களில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், மூவர் படுகாயமடைந்தனர்.

    இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    டெஸ் மொயின்ஸில், இளைஞர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் திட்டமான 'ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர்' என்ற நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு ஊழியர் படுகாயமடைந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்

    உலகம்

    இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வத்தின் படம்: ட்விட்டர் சர்ச்சை இங்கிலாந்து
    சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் சீனா
    பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை: தாலிபான் உத்தரவு உலக செய்திகள்
    கல்வி, வேலை, சுதந்திரம்: ஆப்கான் பெண்ணின் புதுவிதமான எதிர்ப்பு போராட்டம் உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025