NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மனைவியின் உடலை 224 துண்டுகளாக வெட்டி, ஆற்றில் எறிந்த கொடூர கணவன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மனைவியின் உடலை 224 துண்டுகளாக வெட்டி, ஆற்றில் எறிந்த கொடூர கணவன்
    இறந்து போன ஹாலி பிராம்லி உடன் சைக்கோ கணவன் நிக்கோலஸ் மெட்சன்

    மனைவியின் உடலை 224 துண்டுகளாக வெட்டி, ஆற்றில் எறிந்த கொடூர கணவன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 07, 2024
    12:38 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்தில் 28 வயது இளைஞன் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவளது உடலை 224 துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் சுற்றிய ஆற்றில் வீசியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    அந்த நபர் தனது மனைவியை பலமுறை குத்தி கொலைசெய்து, பின்னர் அவரது உடலை வெட்டி ஆற்றில் இருந்ததை ஒப்புக்கொண்டதால், திங்கள்கிழமை(ஏப்ரல் 8) தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம், 26 வயதான ஹாலி பிராம்லி என்ற பெண் காணாமல்போனதாக புகார் அளிக்கப்பட்டது.

    8 நாட்களுக்கு பின்னர், மார்ச் 25, 2023 அன்று, அவரது உடலின் பாகங்கள் லிங்கன்ஷையரில் உள்ள விதம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டன.

    பெண்ணின் கணவர் நிக்கோலஸ் மெட்சன் அவரது ஜோசுவா ஹான்காக் என்பவருடன் சேர்ந்து சடலத்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.

    விசாரணை

    சைக்கோ கணவன்

    விசாரணையின் போது, ​​ஹான்காக், மெட்சனின் நண்பர் என்பதும், கொலைக்குப் பிறகு, உடலின் பாகங்களை அப்புறப்படுத்த மெட்சன் பணம் கொடுத்தார் என்பதையும் ஹான்காக் ஒப்புக்கொண்டார் என்று பிபிசி தெரிவித்துள்ளது.

    அதேநேரத்தில், 2013, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளிலும் இதேபோல தனது காதலிகளுக்கு எதிராக கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்ட மெட்சன், தற்போது தனது மனைவியை எதற்காக கொன்றான் என்பதை தெரிவிக்கவில்லை.

    2021இல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, லிங்கனில் வசித்தவரை, பிராம்லியை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார் மெட்சன் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    தி டெய்லி மெயில் படி, மெட்சன், மனைவியை தண்டிக்க அவரின் செல்ல பிராணிகளை கொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    சிக்கியது எப்படி?

    எப்படி சிக்கினார் கொலையாளி?

    பிராம்லி குறித்து புகார் வந்ததும், லிங்கன்ஷையர் காவல்துறை மார்ச்-24, 2023 அந்த தம்பதியினரின் அபார்ட்மெண்டிற்கு விரைந்துள்ளனர்.

    மெட்சன், அதிகாரிகளிடம் தன்னை தனது மனைவி கொடுமைப்படுத்தியதாகவும், முந்தைய வார இறுதியில் பிராம்லி தன்னைத் தாக்கியதாகவும் கூறினார்.

    மேலும் அவரது மனைவி மார்ச்-19 அன்று உள்ளூர் மனநல உதவிக்குழுவுடன் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும், மார்ச்-25 அன்று, போலீசார் மீண்டும் வீட்டிற்குச் சென்றபோது, ​​​​குளியல் தொட்டியில் இரத்தக்கறை படிந்த படுக்கைவிரிப்பு, பிரதான படுக்கையறையில் இருந்த கறைகள், சமையலறையில் ஒரு ரம்பம் மற்றும் அம்மோனியா மற்றும் ப்ளீச் ஆகியவற்றின் கடுமையான நெடியையும் அவர்கள் கவனித்தனர்.

    வீடு மறுவடிவமைக்கப்பட்டு சமீபத்தில் சுத்தம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதை கவனித்த காவல்துறையினர், அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    கொலை

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    இங்கிலாந்து

    டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் மீட்பு அமெரிக்கா
    "இங்கிலாந்து தோற்றதற்கு காரணம் இதுதான்": சச்சின் டெண்டுல்கர் கருத்து கிரிக்கெட்
    இங்கிலாந்தில் ஒரே நாளில் ₹5.75 கோடி வசூல் செய்த லியோ லியோ
    தமிழகத்தில் மூன்று நாட்களில் ₹80 கோடி வசூல் செய்த லியோ லியோ

    கொலை

    இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன? அமெரிக்கா
    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை நாடாளுமன்றம்
    ஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு  கேரளா
    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது சிறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025