NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறியதாக அறிவிக்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறியதாக அறிவிக்கப்பட்டது
    வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி

    டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறியதாக அறிவிக்கப்பட்டது

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 23, 2023
    09:15 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் வடஅட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கியானது வெடித்து சிதறியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

    அமெரிக்க நேரப்படி ஜூன் 18-ல் காணாமல் போன அந்த நீர்மூழ்கியை தேடும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக இடைவிடாமல் நடைபெற்று வந்தன.

    அந்த நீர்மூழ்கியில் ஐந்து பேர் வரை பயணம் செய்திருக்கும் நிலையில், அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் 96 மணி நேரத்திற்கான ஆக்ஸிஜனைக் அந்த நீர்மூழ்கி கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    டைட்டன் நீர்மூழ்கி காணாமல் சென்று 96 மணி நேரத்தைக் கடந்திருக்கும் நிலையில், அதில் பயணம் செய்தவர்கள் உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு இனி மிகவும் அரிது. இந்த நிலையில் தான் அந்த நீர்மூழ்கி வெடித்து சிதறியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

    அமெரிக்கா

    யார் யார் பயணம் செய்தது? எப்படிக் கண்டறிந்தார்கள்? 

    அமெரிக்க கடற்படையினர் தேடுதல் நடத்திக் கொண்டிருந்த போது அந்த டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்து சிதறிய துண்டு ஒன்று அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

    இந்த உடைந்த துண்டானது டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலிருந்து 1,600 மீட்டர்கள் தொலைவில் கிடைத்திருக்கிறது.

    இந்த சிதறிய துண்டை மேலும் ஆராய்ந்த பிறகு, அது டைட்டன் நீர்மூழ்கியின் பாகமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் அதிகாரிகள்.

    காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கியில், பிரிட்டனைச் சேர்ந்த ஹமிஷ் ஹார்டிங், பிரான்ஸைச் சேர்ந்த கடல் நிபுணரான பால்-ஹென்றி நார்கோலெட், இந்த ஆழ்கடல் சுற்றுலாவை நடத்தி வரும் ஓஷன்கேட் நிறுவனத்தின் சிஇஓ ஸ்டாக்டன் ரஷ், பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான ஷசாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகியோர் பயணம் செய்திருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    அமெரிக்கா

    அமேசான் நிறுவனத்தின் மீது இரண்டு வழக்குகள்.. ஏன்? அமேசான்
    அமெரிக்க ஸ்பெல்லிங் பீ பட்டத்தை வென்ற இந்திய-அமெரிக்க சிறுவன்  உலகம்
    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி  இந்தியா
    2024 டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்துக்கு மாற்ற ஐசிசி திட்டம்! டி20 உலகக்கோப்பை

    உலகம்

    யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி!  கோடை காலம்
    ஹிட்லரின் பென்சில் ஜூன் 6ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது உலக செய்திகள்
    சிங்கப்பூரில் உயரும் சொத்து மதிப்பு: வாடகை வீடு எடுப்பது கூட இனி கடினம்  உலக செய்திகள்
    அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த அமெரிக்க அறிக்கை 'நேர்மறையானது': ரஷ்யா  உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025