NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா
    34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 11, 2023
    04:47 pm
    34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா
    சன் பார்மா நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி-13அன்று வகுப்பு-II நாடு தழுவிய(US) திரும்ப பெறுதலை தொடங்கியது.

    மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா, அமெரிக்க சந்தையில் இருக்கும் 34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது. டிஸ்ஸோலுஷன் சோதனையில் அந்த மருந்துகள் தோல்வியடைந்ததே இதற்கு காரணமாகும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில இதய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் டில்டியாசெம் ஹைட்ரோகுளோரைடு-வெளியீட்டு காப்ஸ்யூல்களை, சன் பார்மாவின் அமெரிக்க பிரிவு திரும்பப் பெறுகிறது. நியூ ஜெர்சியை(பிரின்ஸ்டன்) சார்ந்த சன் பார்மா, "தோல்வியடைந்த இம்ப்யூரிட்டி(டீசெடைல் டில்டியாசெம் ஹைட்ரோகுளோரைடு) மற்றும் தோல்வியடைந்த டிஸ்ஸோலுஷன் சோதனைகளின் காரணமாக" அந்த மருந்து பேட்ச்சை திரும்ப பெறுகிறது. மும்பையை மையமாக கொண்ட இந்த மருந்து தயாரிப்பு நிறுவனம், குஜராத்தில் உள்ள அதன் ஹலோல்-அடிப்படையிலான உற்பத்தி ஆலையில் இந்த பொருட்களை தயாரித்ததுள்ளது.

    2/2

    இந்திய இருமல் மருந்துகள் மற்றும் கண் மருந்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள்

    குஜராத்தில் தயாரிக்கப்பட்ட அந்த மருந்துகள் அமெரிக்காவை மையமாக கொண்ட யூனிட்டால் சந்தையில் விநியோகிக்கப்பட்டது. சன் பார்மா நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி-13அன்று வகுப்பு-II நாடு தழுவிய(அமெரிக்கா) திரும்ப பெறுதலை தொடங்கியது. வகுப்பு-II திரும்ப பெறுதல் என்பது மருந்துகளால் சரி செய்யப்பட கூடிய உடல் கோளாறுகளை ஏற்படுத்தும் மருந்து அவசரநிலைக்கு அழைப்பு விடுப்பதாகும். அதாவது, சன் பார்மா திரும்ப பெறும் மருந்துகளால் தற்காலிக அல்லது மருத்துவரீதியாக சரிசெய்யக்கூடிய உடல் கோளாறுகள் ஏற்படலாம் என்பதாகும். ஏற்கனவே, இந்தியாவில் உற்பத்தி செய்த இருமல் மருந்துகள் மற்றும் கண் மருந்துகளால் உலக அளவில் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மிகபெரும் மருந்து நிறுவனமான சன் பார்மா மருந்தை திரும்ப பெற இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    உலகம்
    அமெரிக்கா

    இந்தியா

    விமானிகள் பயிற்சியில் தவறிழைத்ததால் ஏர் ஏசியாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விமானம்
    வாட்ஸ்அப் புதிய அப்டேட்! ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பலாம் வாட்ஸ்அப்
    Yamaha mt 15 பிரியர்களுக்கு செம்ம அப்டேட்! புதிய வெர்ஷன் அறிமுகம் பைக் நிறுவனங்கள்
    இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர் துருக்கி

    உலகம்

    அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா அமெரிக்கா
    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    ஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Yahoo நிறுவனம்! ஆட்குறைப்பு
    துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது துருக்கி-சிரியா நிலநடுக்கம்

    அமெரிக்கா

    கின்னஸ் சாதனை: கண்ணை மூடிக்கொண்டு பந்தை அடித்து விளையாடிய சிறுவன் உலகம்
    இரண்டு ஆண்டு தடைக்குபின் ட்ரம்பின் கணக்குகள் மீண்டும் தொடக்கம்! தொழில்நுட்பம்
    இந்தியா தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை இந்தியா
    சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023