NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும்
    உலகம்

    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும்

    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 22, 2023, 01:51 pm 1 நிமிட வாசிப்பு
    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும்
    இதன் மூலம், தன்பாலின ஈர்ப்பாளர்களின் சட்டபூர்வமான அங்கீகாரத்தை தென் கொரியா ஏற்றுக்கொண்டுள்ளது.

    தென் கொரியாவில் உள்ள சியோல் உயர் நீதிமன்றம், தன்பாலின ஈர்ப்பு தம்பதிகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியுள்ளது. தென் கொரியாவின் தேசிய சுகாதார காப்பீட்டுச் சேவையில்(NHIS) பிற தம்பதிகளுக்கு எந்த மாதிரியான உரிமைகள் வழங்கப்படுகிறதோ அதே சலுகைகளும் உரிமைகளும் ஒரே-பாலின தம்பதிகளுக்கும் உண்டு என்று தென் கொரிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென் கொரியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சாதகமாக வழங்கப்படும் முதல் தீர்ப்பு இது தான். இதன் மூலம், தன்பாலின ஈர்ப்பாளர்களின் சட்டபூர்வமான அங்கீகாரத்தை தென் கொரியா ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரே-பாலின திருமண சட்டம் தென் கொரியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும், தென் கொரியாவின் முன்னேற்றத்தில் இது ஒரு பெரும் படியாக பார்க்கப்படுகிறது

    பால்புதுமையர் சமூகத்திற்கு சாதகமான தீர்ப்பு

    2021ஆம் ஆண்டு தன் துணைவரான கிம் யோங்-மினுக்கு மருத்துவ காப்பீடு மறுக்கப்பட்டதால், சோ சியோங்-வூக் என்பவர் NHIS மீது வழக்குத் தொடர்ந்தார். முதலில், இந்த தம்பதியருக்கு கவரேஜ் வழங்கிய NHIS, அதன்பின், "ஒரே பாலின தம்பதியருக்கு கவரேஜ் வழங்கி நாங்கள் தவறு செய்துவிட்டோம்" என்று கூறி அவர்களுக்கு கிடைத்த கவரேஜை நீக்கியது. இதனாலேயே அவர் NHIS மீது வழக்குத் தொடர்ந்தார். "சமத்துவம் என்பது ஒரு முக்கியமான பிரச்சினை" என்று சோங்-வூக் பிபிசியிடம் கூறி இருந்தார். ஜனவரி மாதம், சிறு நீதிமன்றம் ஒன்று அவர்களின் சட்டபூர்வ அங்கீகாரத்தை நிராகரித்தது. அதன் பின், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சோ சியோங்-வூக்-க்கு மட்டுமல்லாமல் பால்புதுமையர் சமூகத்திற்கும் சாதகமாக தீர்ப்பை வழங்கியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    தென் கொரியா

    உலகம்

    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    செல்வத்தை இழந்த பில்லியனர்கள் - அதானியின் எழுச்சியும் வீழ்ச்சியும் தொழில்நுட்பம்
    அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் அமெரிக்க-இந்தியர்: யாரிந்த விவேக் ராமசாமி அமெரிக்கா
    சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று; அதன் வரலாறும் முக்கியத்துவமும் வாழ்க்கை

    தென் கொரியா

    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா
    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி உலக செய்திகள்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023