NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் - டன் கணக்கிலான தானியங்கள் சேதம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் - டன் கணக்கிலான தானியங்கள் சேதம் 
    உக்ரைன் துறைமுகம் மீது ரஷியா நடத்திய தாக்குதல் - டன் கணக்கிலான தானியங்கள் சேதம்

    உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் - டன் கணக்கிலான தானியங்கள் சேதம் 

    எழுதியவர் Nivetha P
    Aug 03, 2023
    02:58 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் நாட்டினை கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆக்கிரமித்தது.

    இதனையடுத்து சிறிய நாடான உக்ரைன், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷ்யா மீது பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த இருநாடுகள் இடையே நடக்கும் போரில் பலத்தரப்பட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அப்பாவி மக்களின் உயிர்களும், பலியாகி வருகிறது.

    இந்நிலையில் உக்ரைன்-ருமேனியா எல்லை பகுதியில் ஓடும் டானுபே ஆற்றின் அருகேயுள்ள இஸ்மாயில் துறைமுகம் மீது ரஷ்யா தற்போது ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த தாக்குதலால் அந்த துறைமுகத்தில் இருந்து தானியங்களை ஏற்றி செல்லும் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    தாக்குதல் 

    தானிய விநியோகம் பாதிக்கப்பட வேண்டும் என எண்ணும் ரஷ்யா-உக்ரைன் அதிபர் 

    சரக்குக்கப்பல்கள் ஆப்ரிக்கா, இஸ்ரேல், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தானியங்களை ஏற்றிச்செல்ல துறைமுகத்திற்குள் நுழையும்பொழுது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இத்தாக்குதலில் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமடைந்துள்ளது என்றும், டானுபே துறைமுகக்கட்டமைப்புகள் அனைத்தும் பெரியளவில் சேதமாகியுள்ளது என்றும் உக்ரைன் நாட்டின் துணை பிரதமர்-ஒலெக்ஸாண்டர் குப்ரகோவ் தெரிவித்துள்ளார்.

    மேலும் உக்ரைன் நாட்டின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறொரு நாட்டால் ஏற்றுமதி செய்ய இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, ரஷ்யா நடத்திவரும் இப்போரால் உலக உணவுச்சந்தை அழிந்துவிடும் என்றும், தானிய விநியோகம் பாதிக்கப்பட வேண்டும் என்பதையே ரஷ்யா விரும்புகிறது என்றும் உக்ரைன் நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டினை முற்றிலுமாக மறுத்துள்ள ரஷ்யா, அத்துறைமுகம் ராணுவ தளவடங்களுக்கும், அயல்நாட்டு பயங்கரவாதிகளுக்கும் புகலிடமாக இருந்துவந்தது என்று கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    உக்ரைன்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ரஷ்யா

    ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா உக்ரைன்
    ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு சீனா
    ரஷ்ய அதிபர் பேசி கொண்டிருக்கும் போது காதில் நூடுல்ஸை தொங்கவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உலகம்
    உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்: பிரதமர் மோடி இந்தியா

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உலகம்
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025