NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில்
    இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக எழுதப்பட்ட வாசகங்கள்

    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 15, 2023
    12:30 pm

    செய்தி முன்னோட்டம்

    கனடாவின் மிசிசாகாவில் உள்ள ராமர் கோவில் ஒன்று 'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

    டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்ததுடன், உடனடி நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    "மிசிசாகாவில் உள்ள ராமர் கோவில் ஆன்டி இந்தியன் கிராஃபிட்டிகளால் சிதைக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்." என்று இந்திய துணைத் தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

    அந்த கோவிலில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக வாசகங்கள் எழுதியுள்ளனர். மேலும், பிந்த்ராவாலாவை வாழ்த்திப் பாராட்டியும் அதில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

    பிந்த்ராவாலா என்பவர் பஞ்சாப்பில் இருக்கும் சீக்கியர்களுக்கு, தனி தேசம் வேண்டும் என்று போராடியவர் ஆவார்.

    கனடா

    இதற்கு முன் நடந்த இதே போன்ற ஒரு சம்பவம்

    பிராம்ப்டனின் மேயர், பேட்ரிக் பிரவுன், இதை 'ஹேட் கிரைம்'(மற்றவர்கள் மீது இருக்கும் வெறுப்பினால் செய்யப்படும் குற்றங்கள்) என்று குறிப்பிட்டு இதற்கு அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கை எடுப்பர் என்று கூறியுள்ளார்.

    " 12 பிரிவுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் இதை செய்தவர்களைக் கண்டுபிடிப்பார்கள். மத சுதந்திரம் என்பது கனடாவில் அனைவருக்குமான உரிமையாகும். மேலும் அனைவரும் அவரவர் வழிபாட்டுத் தலத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்." என்று பிராம்ப்டனின் மேயர், பேட்ரிக் பிரவுன் கூறியுள்ளார்.

    இப்படி ஒரு இந்து கோவில் சிதைக்கப்படுவது கனடாவில் இது முதல் முறையல்ல. கடந்த ஜனவரியில், பிராம்ப்டனில் உள்ள ஒரு இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்

    கனடா

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம் உலக செய்திகள்
    10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா உலகம்
    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம் இந்தியா

    உலக செய்திகள்

    பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா அமெரிக்கா
    இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் இந்தியா
    பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை: தாலிபான் உத்தரவு உலகம்
    கல்வி, வேலை, சுதந்திரம்: ஆப்கான் பெண்ணின் புதுவிதமான எதிர்ப்பு போராட்டம் உலகம்

    உலகம்

    துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    30 நிமிஷத்தில் 1300 பேரை பணிநீக்கம் செய்த Zoom நிறுவனம்! ஆட்குறைப்பு
    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025