NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / செக் குடியரசு துப்பாக்கிச் சூடு: சார்லஸ் பல்கலைக்கழகத்தில் 14 பேர் சுட்டுக்கொலை, 25 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செக் குடியரசு துப்பாக்கிச் சூடு: சார்லஸ் பல்கலைக்கழகத்தில் 14 பேர் சுட்டுக்கொலை, 25 பேர் காயம்

    செக் குடியரசு துப்பாக்கிச் சூடு: சார்லஸ் பல்கலைக்கழகத்தில் 14 பேர் சுட்டுக்கொலை, 25 பேர் காயம்

    எழுதியவர் Srinath r
    Dec 22, 2023
    09:45 am

    செய்தி முன்னோட்டம்

    செக் குடியரசின் தலைநகர் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நவீன செக் குடியரசு நாட்டின் வரலாற்றில் பதிவான, மிகவும் மோசமான துப்பாக்கி சூடுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட டேவிட் கோசாக், உயிரிழந்ததாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட டேவிட் கோசாக் அவர் சொந்த ஊரான ஹோஸ்டவுன் பகுதியில் உள்ள வீட்டில், அவரது தந்தையையும் சுட்டுக்கொன்றார்.

    ஜன் பலாச் சதுக்கத்தில் உள்ள பல்கலைக்கழக கலை பீட கட்டிடத்தில், உள்ளூர் நேரப்படி சுமார் 15:00 மணிக்கு துப்பாக்கி சூடு தொடங்கியது.

    2nd card

    ப்ராக் சார்லஸ் பல்கலைக்கழக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட டேவிட் கோசாக் யார்?

    டேவிட் கோசாக் ப்ராக் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் போலந்து வரலாறு பட்டப்படிப்பை பயின்று வந்தார்.

    ப்ராக் காவல்துறைத் தலைவர் மார்ட்டின் வோண்ட்ராசெக், டேவிட் கோசாக் எந்த குற்றப் பதிவும் இல்லாத சிறந்த மாணவர் என்று விவரித்தார், ஆனால் வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை.

    கடுமையான காயத்தால் உயிரிழந்த டேவிட் கோசாக், தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது காவல்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தாரா என்பது தெளிவாகவில்லை.

    அவர் பல துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததாகவும், இதனால் ஒரு பயங்கரமான தாக்குதலுக்கு அவர் தயாராக இருந்தது உறுதியாவதாக காவல்துறை கூறுகிறது.

    தாக்குதலில் ஈடுபடும் முன் சமூக வலைதளங்களில், தற்கொலை மற்றும் வெகுஜன கொலைகள் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துப்பாக்கி சூடு
    கொலை

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    கொலை

    சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு  கனடா
    மணிப்பூர்: காணாமல் போன 2 மெய்டே மாணவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் மணிப்பூர்
    6 மர்மநபர்கள், 2 பைக்குகள், 50 தோட்டாக்கள்: நிஜ்ஜார் கொலை வழக்கில் CCTV பதிவு வெளியானதாக தகவல் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர் மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025