NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி

    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி

    எழுதியவர் Nivetha P
    Dec 27, 2022
    10:31 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.

    இதனால் உருக்குலைந்த உக்ரைன் ஏராளமான பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்களையும் மேற்கொண்டு வருகிறது.

    உக்ரைன் தலைநகரமான கீவ், மக்கள் வாழ தகுதியற்ற இடம் என்று உலக நாடுகள் சொல்லும் அளவிற்கு நிலைமை அங்கு மோசமாக மாறியுள்ளது.

    மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கட்டமைப்புகள் அனைத்தும் ரஷ்யாவால் தாக்கப்பட்டது.

    இதனால் அங்குள்ள நகரம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளதாக முன்னதாகவே உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.

    மேலும் 45 லட்சம் பொதுமக்கள் போதிய உணவு இல்லாமல் தவிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.

    ஜெலன்ஸ்கி வருத்தம்

    இருளில் மூழ்கிய 9 மில்லியன் உக்ரேனிய மக்கள்

    அதிகாரப் போட்டிக்காக துவங்கிய இந்த தாக்குதலால் பெரும் பொருட் சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சாமானிய மக்களே இதில் அதிகம் பாதிப்படைந்து உள்ளனர்.

    இந்நிலையில் ஜெலன்ஸ்கி சமீபத்தில் இரவில் எடுக்கப்பட்ட வீடியோ உரையில், "ரஷ்ய தாக்குதலுக்கு பிறகு கிறிஸ்துமஸ் பாண்டிகையொட்டி மின் உற்பத்தி நிலையங்களை சீர் செய்யும் பணியில் பல ஊழியர்கள் ஈடுபட்ட நிலையிலும் சிக்கல்கள் எதுவும் சரியாகாமல் தொடர்கிறது.

    இயற்கையாகவே பற்றாக்குறையும், மின் தடையும் நீடிக்கிறது.

    இன்று மாலை நிலவரப்படி, உக்ரைனில் கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி அவதிக்குள்ளாகி வருகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

    போர் முடிவிற்கு வந்தாலும், உக்ரைன் பழைய நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என்று வல்லுநர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    ரஷ்யா

    சமீபத்திய

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலகம்
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    ரஷ்யா

    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? இந்தியா
    ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ன சொல்கிறார் புதின்? உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025