NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான்
    பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 55% பேர் ராணுவ வீரர்கள் ஆவர்.

    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 16, 2023
    11:53 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானில் வேகமாக வளர்ந்து வரும் பயங்கரவாதக் குழுவாக பலுசிஸ்தான் விடுதலைப் படை இருக்கிறது என்றும் பயங்கரவாதம் தொடர்பான இறப்புகள் 120% பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது என்றும் ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி தெற்காசியாவிலேயே அதிக தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் இறப்புகள் கொண்ட நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டில் மட்டும் 643 பேர் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தால் உயிரிழந்துள்ளனர்.

    பாகிஸ்தானில் பயங்கரவாத இறப்புகளின் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

    பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 55% பேர் ராணுவ வீரர்கள் ஆவர்.

    பாகிஸ்தான்

    தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தானை மிஞ்சிய பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்

    பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்பான இறப்புகளில் 36 சதவீதத்திற்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்(BLA) பொறுப்பேற்றுள்ளது, இது முந்தைய ஆண்டை விட ஒன்பது மடங்கு அதிகமாகும்.

    அறிக்கையின்படி, பாகிஸ்தான் தாலிபான் என்றும் அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தானை(TTP) விட மிகக் கொடிய பயங்கரவாதக் குழுவாக பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் உருவெடுத்துள்ளது.

    2022 இல் BLA தாக்குதலால் 233 இறப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அதில் 95 சதவீதம் பேர் இராணுவ வீரர்கள் ஆவர்.

    ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் சுதந்திரத்திற்காக போராடுவதாக BLA கூறிவருகிறது.

    BLA மற்றும் TTP ஆகிய இரண்டு அமைப்பையும் பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    தாலிபான்
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்

    தாலிபான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்

    உலகம்

    விமான நிலையத்தில் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர்: திருநர் மாடல் குற்றசாட்டு இந்தியா
    அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை உலக செய்திகள்
    வைரல் வீடியோ: நீல வானமாக மாறிய பூமி: ஜப்பான் இப்படி தான் இருக்குமா இந்தியா
    இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025