NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 4,800க்கும் மேற்பட்ட சிறார்களை வன்கொடுமை செய்த சர்ச் உறுப்பினர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    4,800க்கும் மேற்பட்ட சிறார்களை வன்கொடுமை செய்த சர்ச் உறுப்பினர்கள்
    1950ஆம் ஆண்டு முதல் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு

    4,800க்கும் மேற்பட்ட சிறார்களை வன்கொடுமை செய்த சர்ச் உறுப்பினர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2023
    08:33 pm

    செய்தி முன்னோட்டம்

    போர்ச்சுகல் கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 70 ஆண்டுகளில் 4,800க்கும் மேற்பட்ட சிறார்களை அந்த திருச்சபையின் உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.

    பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 512 பேர் ஏற்கனவே சாட்சி கூற முன்வந்துள்ளனர் என்று தேவாலயத்தில் வரலாற்று வன்கொடுமை குறித்து ஆராயும் நிபுணர் குழு இன்று(பிப் 13) தெரிவித்துள்ளது.

    மூத்த போர்த்துகீசிய தேவாலய அதிகாரிகள், ஒரு சில வழக்குகள் மட்டுமே நடந்ததாகக் முன்பு கூறி இருந்தனர்.

    நிபுணர் குழுவின் 500 பக்க அறிக்கையை தேவாலய அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே அதிகாரபூர்வ பதில் அளிக்கப்படும் என்று போர்த்துகீசிய பிஷப்கள் மாநாட்டின் தலைவர் பிஷப் ஜோஸ் ஓர்னெலாஸ் கூறி இருக்கிறார்.

    போர்ச்சுகல்

    25 வழக்குகள் மட்டுமே வழக்காட அனுப்பட்டுள்ளன

    கத்தோலிக்க திருச்சபையில் சிறுவர் வன்கொடுமை பற்றிய ஆய்வுக்கான சுயாதீனக் குழு, போர்த்துகீசிய பிஷப்களால் ஒரு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் 1950ஆம் ஆண்டு முதல் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்தனர்.

    போர்த்துகீசிய பிஷப்கள் அடுத்த மாதம் இந்த அறிக்கையை விவாதிக்க உள்ளனர்.

    தேவாலய ஆவண காப்பகங்களுக்கு அனுமதி வழங்க வாட்டிகன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டதற்கு குழு வருத்தம் தெரிவித்திருந்தது. கடந்த அக்டோபர் மாதம் வன்கொடுமைக் குறித்த எழுத்துப்பூர்வ ஆதாரங்களை ஆராய மூன்று மாதங்கள் மட்டுமே குழுவுக்கு அனுமதி கிடைத்தது.

    கூறப்படும் வழக்குகளில் பெரும்பாலானவற்றின் வரம்புகள் காலாவதியாகிவிட்டது. 25 குற்றச்சாட்டுகள் மட்டுமே வழக்கறிஞர்களுக்கு அனுப்பப்பட்டன என்று குழு கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா
    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்
    தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை

    உலக செய்திகள்

    சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம்-2023ம் ஆண்டில் மொத்தம் நான்கு கிரகணங்கள் என கணிப்பு உலகம்
    இதய நோயால் மயங்கி விழுந்த தாய்லாந்து இளவரசி - 3 வாரமாகியும் சுயநினைவு திரும்பவில்லை உலகம்
    பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா அமெரிக்கா
    இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் இந்தியா

    உலகம்

    துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு உலக செய்திகள்
    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய இந்தியா எடுத்த நடவடிக்கைகள் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் பாகிஸ்தான்
    ஜப்பானில் சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்! சுற்றுலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025