NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 4,800க்கும் மேற்பட்ட சிறார்களை வன்கொடுமை செய்த சர்ச் உறுப்பினர்கள்
    4,800க்கும் மேற்பட்ட சிறார்களை வன்கொடுமை செய்த சர்ச் உறுப்பினர்கள்
    உலகம்

    4,800க்கும் மேற்பட்ட சிறார்களை வன்கொடுமை செய்த சர்ச் உறுப்பினர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    February 13, 2023 | 08:33 pm 0 நிமிட வாசிப்பு
    4,800க்கும் மேற்பட்ட சிறார்களை வன்கொடுமை செய்த சர்ச் உறுப்பினர்கள்
    1950ஆம் ஆண்டு முதல் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு

    போர்ச்சுகல் கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 70 ஆண்டுகளில் 4,800க்கும் மேற்பட்ட சிறார்களை அந்த திருச்சபையின் உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 512 பேர் ஏற்கனவே சாட்சி கூற முன்வந்துள்ளனர் என்று தேவாலயத்தில் வரலாற்று வன்கொடுமை குறித்து ஆராயும் நிபுணர் குழு இன்று(பிப் 13) தெரிவித்துள்ளது. மூத்த போர்த்துகீசிய தேவாலய அதிகாரிகள், ஒரு சில வழக்குகள் மட்டுமே நடந்ததாகக் முன்பு கூறி இருந்தனர். நிபுணர் குழுவின் 500 பக்க அறிக்கையை தேவாலய அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே அதிகாரபூர்வ பதில் அளிக்கப்படும் என்று போர்த்துகீசிய பிஷப்கள் மாநாட்டின் தலைவர் பிஷப் ஜோஸ் ஓர்னெலாஸ் கூறி இருக்கிறார்.

    25 வழக்குகள் மட்டுமே வழக்காட அனுப்பட்டுள்ளன

    கத்தோலிக்க திருச்சபையில் சிறுவர் வன்கொடுமை பற்றிய ஆய்வுக்கான சுயாதீனக் குழு, போர்த்துகீசிய பிஷப்களால் ஒரு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் 1950ஆம் ஆண்டு முதல் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்தனர். போர்த்துகீசிய பிஷப்கள் அடுத்த மாதம் இந்த அறிக்கையை விவாதிக்க உள்ளனர். தேவாலய ஆவண காப்பகங்களுக்கு அனுமதி வழங்க வாட்டிகன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டதற்கு குழு வருத்தம் தெரிவித்திருந்தது. கடந்த அக்டோபர் மாதம் வன்கொடுமைக் குறித்த எழுத்துப்பூர்வ ஆதாரங்களை ஆராய மூன்று மாதங்கள் மட்டுமே குழுவுக்கு அனுமதி கிடைத்தது. கூறப்படும் வழக்குகளில் பெரும்பாலானவற்றின் வரம்புகள் காலாவதியாகிவிட்டது. 25 குற்றச்சாட்டுகள் மட்டுமே வழக்கறிஞர்களுக்கு அனுப்பப்பட்டன என்று குழு கூறியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உலக செய்திகள்
    உலகம்

    உலக செய்திகள்

    கின்னஸ் சாதனை: கண்ணை மூடிக்கொண்டு பந்தை அடித்து விளையாடிய சிறுவன் உலகம்
    உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில் விண்வெளி
    இரண்டு ஆண்டு தடைக்குபின் ட்ரம்பின் கணக்குகள் மீண்டும் தொடக்கம்! தொழில்நுட்பம்
    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா

    உலகம்

    துருக்கி பூகம்ப இடிபாடுகளில் இருந்து 128 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை துருக்கி
    மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்: 33 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் துருக்கி
    அடையாளம் தெரியாத விமானங்களை சுட்டு வீழ்த்தும் அமெரிக்கா: காட்டத்தில் சீனா சீனா
    எலான் மஸ்க் வேற்றுகிரகவாசியா? சலசலப்பை ஏற்படுத்திய ட்விட்டரின் பதிவுகள்; எலான் மஸ்க்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023