NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு! 
    AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு! 
    உலகம்

    AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 02, 2023 | 12:08 pm 1 நிமிட வாசிப்பு
    AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு! 
    செயற்கை நுண்ணறிவுத் துறையில் உருவாகவிருக்கும் வேலைவாய்ப்புகள்

    செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பங்களால் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், AI-யால் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. உலகம் முழுவதும் 45 வேறுபட்ட பொருளாதாரங்களில் இருந்து 27 தொழில் குழுக்களில் இருக்கும் 803 நிறுவனங்களிடம் ஆய்வொன்றை நடத்தியது உலகப் பொருளாதார மன்றம். ஒட்டுமொத்தமாக 11.3 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். AI உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் உலகம் முழுவதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 69 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகம் எனத் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது உலகப் பொருளாதார மன்றம். அதேநேரம், 2027-ம் ஆண்டிற்குள் 83 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிபோகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வேவை வாய்ப்பு சந்தை நிலவரம்: 

    இந்திய வேலை வாய்ப்பு சந்தை 22% வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. AI, மெஷின் லேர்னிங் மற்றும் தகவல்துறை ஆகியவை வேலை வாய்ப்பு பெருக்கத்தில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ESG ஸ்டாண்டர்டை பரவலாக்குவதன் மூலம் வேலைவாய்ப்புகள் வளர்ச்சியடையும் என 61% நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன. புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் டிஜிட்டல் அணுகலை மேம்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு துறை வளரச்சியடையும் என முறையே 59% மற்றும் 55% நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன. ஆய்வில் பங்கெடுத்த 75% நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளில் AI-யை பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கின்றன. இந்தியாவில் கல்வி மற்றும் விவசாயத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக உலகப் பொருளதார மன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    செயற்கை நுண்ணறிவு
    உலகம்

    செயற்கை நுண்ணறிவு

    IBM ஊழியர்களுக்கு CEO கொடுத்த அதிர்ச்சி தகவல் - 7800 பேரின் வேலையை பறிக்கும் AI!  ஆட்குறைப்பு
    AI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு! ஆன்லைன் மோசடி
    'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி! கூகுள்
    AI-யின் வளர்ச்சி.. சுருங்குகின்றனவா பெருநிறுவனங்கள்?  சாட்ஜிபிடி

    உலகம்

    இன்று உலக ஹாரி பாட்டர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்  இங்கிலாந்து
    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்  இந்தியா
    தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு  தமிழ்நாடு
    இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023