NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா?
    ஐன் துபாய்(துபாயின் கண்கள்) என்று அழைக்கப்படும் ரங்க ராட்டினம்

    துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா?

    எழுதியவர் Sindhuja SM
    Aug 07, 2023
    06:21 pm

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம், திடீரென்று மர்மமான காரணங்களுக்காக கடந்த ஆண்டு மூடப்பட்டது.

    மூடப்பட்டு பல மாதங்களாகியும் அது மீண்டும் திறக்கப்படவில்லை என்பதால், வணிகர்களும் சுற்றுலா பயணிகளும் அதிருப்தி அடைந்ததுள்ளனர்.

    மிகவும் பிரபலமான ஐன் துபாய்(துபாயின் கண்கள்) என்று அழைக்கப்படும் ரங்க ராட்டினம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிளாம்-ஹப்பில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கோடு வடிவமைக்கப்பட்டது.

    இந்த கிளாம்-ஹப்பில் தான் உலகின் மிக உயரமான கட்டிடமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், அந்த ரங்க ராட்டினத்தின் இயக்கம் கடந்த ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டது.

    அது எதற்காக நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

    ஜட்ஜ்

    பதிலளிக்க மறுக்கும் அதிகாரிகள் 

    "ஐன் துபாய் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும்" என்று மட்டும் ஐன் துபாயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    "கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முடிப்பதற்கு நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்." என்றும் கூறப்பட்டிருந்தது.

    ஒரு மாதத்திற்கு மட்டுமே மூடப்படுவதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாதங்களாகியும் இன்னும் உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படவில்லை.

    இதனால், அப்பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் வைத்திருக்கும் வணிகர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இனி அந்த ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது.

    ஆனால், அதிகாரிகள் இதுவரை இதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் இருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துபாய்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    துபாய்

    துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்? உலகம்
    வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம் பிரதமர் மோடி
    பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி உலகம்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஹாலிவுட்
    ரிசர்வ் வங்கியுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட UAE-யின் சென்ட்ரல் வங்கி ரிசர்வ் வங்கி
    அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025