NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர்
    மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு 2,800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 31, 2023
    08:08 pm

    செய்தி முன்னோட்டம்

    2020ஆம் ஆண்டில் மியான்மரில் ஆட்சிகவிழ்ப்பு நடந்தது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி என்பவரை சிறைபிடித்த ராணுவம், ஆட்சியை கைப்பற்றியது.

    இந்நிலையில், மியான்மரை ஆட்சி செய்து வரும் ராணுவ அரசு தற்போது தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.

    ராணுவ அரசிற்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால், இந்த தேர்தலினால் வன்முறை வெடிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    தற்போதைய சூழ்நிலையில் திட்டமிடப்பட்ட வாக்கெடுப்பு சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருக்காது என்று பார்வையாளர்கள் அஞ்சுகிறார்கள்.

    விமர்சகர்கள் இதை ராணுவ அரசின் "நடிப்பு" என்று விமர்சித்துள்ளனர். ஆதிக்கத்தில் இருக்கும் ராணுவ அரசின் அதிகாரத்தை நியாயப்படுத்துவதற்காக இது நடத்தப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    மியான்மர்

    தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வரும் மக்கள்

    2020இல் நடந்த தேர்தலில் ஜனநாயகப் பிரமுகர் ஆங்-சான்-சூகியின் கட்சி வெற்றி பெற்றது. அப்போது நடந்த தேர்தலில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக ஆங்-சான்-சூகியின் மீது குற்றம் சாட்டிய ராணுவம், பிப்ரவரி 1, 2021அன்று அதிகாரத்தைக் கைப்பற்றியது.

    இவை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சூகி மற்றும் பிற உயர்மட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் சிறைபிடித்தது.

    இந்நிலையில், அரசியலமைப்பின் படி இராணுவம் இந்த ஆண்டு இறுதியில் ஒரு புதிய தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், அதிகம் மக்கள் ராணுவ அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வருவதால், மக்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வார்களா என்பது பெரிய கேள்வியாகவே இருக்கிறது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

    அப்படி ஏதும் நடந்தால் மீண்டும் நாட்டிற்குள் இரத்தக்களரி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தையும் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    உலக செய்திகள்

    2100ஆம் ஆண்டிற்குள் 80% பென்குயின்கள் அழியும் அபாயம்! உலகம்
    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி ட்ரெண்டிங் வீடியோ
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலகம்
    மனைவியின் தின்பண்டங்களை திருடி தின்ற கணவர்-புதிய குளிர்சாதன பெட்டிக்கு பூட்டு போட்ட கர்ப்பிணி மனைவி டிரெண்டிங்

    உலகம்

    ராணுவ உடையில் அசத்தும் BTS குழுவின் ஜின்; ரசிகர்கள் மகிழ்ச்சி பொழுதுபோக்கு
    உக்ரைன்: ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் பலி ரஷ்யா
    நியூசிலாந்து பிரதமர் திடீர் பதவி விலகல் உலக செய்திகள்
    குடும்ப வன்முறை குறித்து ஏஞ்சலினா ஜோலியின் வைரலாகும் வீடியோ அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025