NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர்
    உலகம்

    ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர்

    ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 31, 2023, 08:08 pm 1 நிமிட வாசிப்பு
    ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர்
    மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு 2,800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    2020ஆம் ஆண்டில் மியான்மரில் ஆட்சிகவிழ்ப்பு நடந்தது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி என்பவரை சிறைபிடித்த ராணுவம், ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், மியான்மரை ஆட்சி செய்து வரும் ராணுவ அரசு தற்போது தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. ராணுவ அரசிற்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால், இந்த தேர்தலினால் வன்முறை வெடிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் திட்டமிடப்பட்ட வாக்கெடுப்பு சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருக்காது என்று பார்வையாளர்கள் அஞ்சுகிறார்கள். விமர்சகர்கள் இதை ராணுவ அரசின் "நடிப்பு" என்று விமர்சித்துள்ளனர். ஆதிக்கத்தில் இருக்கும் ராணுவ அரசின் அதிகாரத்தை நியாயப்படுத்துவதற்காக இது நடத்தப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வரும் மக்கள்

    2020இல் நடந்த தேர்தலில் ஜனநாயகப் பிரமுகர் ஆங்-சான்-சூகியின் கட்சி வெற்றி பெற்றது. அப்போது நடந்த தேர்தலில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக ஆங்-சான்-சூகியின் மீது குற்றம் சாட்டிய ராணுவம், பிப்ரவரி 1, 2021அன்று அதிகாரத்தைக் கைப்பற்றியது. இவை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சூகி மற்றும் பிற உயர்மட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் சிறைபிடித்தது. இந்நிலையில், அரசியலமைப்பின் படி இராணுவம் இந்த ஆண்டு இறுதியில் ஒரு புதிய தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகம் மக்கள் ராணுவ அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வருவதால், மக்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வார்களா என்பது பெரிய கேள்வியாகவே இருக்கிறது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள். அப்படி ஏதும் நடந்தால் மீண்டும் நாட்டிற்குள் இரத்தக்களரி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தையும் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    உலகம்

    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு லைகா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி இந்தியா

    உலக செய்திகள்

    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்
    மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை! இங்கிலாந்து

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023