NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம்
    இவர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பதை புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

    கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 24, 2023
    04:22 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பார்க் நடன ஸ்டுடியோவில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

    இந்த சம்பவத்தால் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த வழக்கின் சந்தேக நபர் ஹூ கேன் டிரான்(72) நேற்று(ஜன 23) டோரன்ஸ் நகரில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இவரது உடலில் தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளங்கள் இருந்தன.

    இந்நிலையில், இவர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பதை புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

    ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய ஒருவர் ஏன் புத்தாண்டு விழாவில் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்பதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை.

    கலிபோர்னியா

    வருத்தத்தாலும் பொறாமையாலும் இப்படி செய்தாரா?

    தானியங்கி துப்பாக்கியைப் பயன்படுத்தி, 50, 60 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க ஆண்களையும் பெண்களையும் அவர் கொன்றதாக கூறப்படுகிறது.

    1994இல் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட டிரான், இந்த தாக்குதலில் 42முறை சுட்டிருக்கிறார் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் ராபர்ட் லூனா கூறி இருக்கிறார்.

    "இதை அவர் செய்ததற்கான காரணம் தெரியவில்லை, ஆனால் இந்த சோகமான நிகழ்வின் பின்னணியில் உள்ள நோக்கத்தை நாங்கள் அறிய விரும்புகிறோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    அவரை புத்தாண்டு பார்ட்டிக்கு அழைக்காததால் அவர் "வருத்ததாலும் பொறாமையாலும்" இப்படி செய்திருக்கலாம் என்று மான்டேரி பார்க்கில் குடியிருக்கும் செஸ்டர்ஹாங் தெரிவித்திருக்கிறார்.

    துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை டிரானுக்கு ஏற்கனவே தெரியும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! தமிழ்நாடு
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்

    உலகம்

    OTT: இந்தாண்டு கோல்டன் குளோப் விருதுகள் வென்ற திரைப்படங்களை எங்கே பார்க்கலாம்? ஓடிடி
    இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வத்தின் படம்: ட்விட்டர் சர்ச்சை இங்கிலாந்து
    சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் சீனா
    பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை: தாலிபான் உத்தரவு உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025