NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம்
    உலகம்

    கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம்

    கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 24, 2023, 04:22 pm 0 நிமிட வாசிப்பு
    கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம்
    இவர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பதை புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பார்க் நடன ஸ்டுடியோவில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சம்பவத்தால் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் சந்தேக நபர் ஹூ கேன் டிரான்(72) நேற்று(ஜன 23) டோரன்ஸ் நகரில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இவரது உடலில் தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளங்கள் இருந்தன. இந்நிலையில், இவர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பதை புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர். ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய ஒருவர் ஏன் புத்தாண்டு விழாவில் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்பதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை.

    வருத்தத்தாலும் பொறாமையாலும் இப்படி செய்தாரா?

    தானியங்கி துப்பாக்கியைப் பயன்படுத்தி, 50, 60 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க ஆண்களையும் பெண்களையும் அவர் கொன்றதாக கூறப்படுகிறது. 1994இல் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட டிரான், இந்த தாக்குதலில் 42முறை சுட்டிருக்கிறார் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் ராபர்ட் லூனா கூறி இருக்கிறார். "இதை அவர் செய்ததற்கான காரணம் தெரியவில்லை, ஆனால் இந்த சோகமான நிகழ்வின் பின்னணியில் உள்ள நோக்கத்தை நாங்கள் அறிய விரும்புகிறோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவரை புத்தாண்டு பார்ட்டிக்கு அழைக்காததால் அவர் "வருத்ததாலும் பொறாமையாலும்" இப்படி செய்திருக்கலாம் என்று மான்டேரி பார்க்கில் குடியிருக்கும் செஸ்டர்ஹாங் தெரிவித்திருக்கிறார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை டிரானுக்கு ஏற்கனவே தெரியும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    உலகம்

    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு லைகா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி இந்தியா

    அமெரிக்கா

    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை வட கொரியா
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா இந்தியா
    இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம் உலகம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023