NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மார்ச் 10க்கு முன் பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்து போர்நிறுத்தம் செய்ய முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மார்ச் 10க்கு முன் பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்து போர்நிறுத்தம் செய்ய முடிவு 

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மார்ச் 10க்கு முன் பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்து போர்நிறுத்தம் செய்ய முடிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 25, 2024
    03:55 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாரிஸ் மற்றும் கெய்ரோவிற்கு அனுப்பப்பட்ட இஸ்ரேல் தூதுக்குழு, மாரத்தான் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் ஜெருசலேமிற்கு வந்துள்ளது.

    அந்த தூதுக்குழுவிற்கு மொசாட் தலைவர் டேவிட் பார்னியா மற்றும் ஷின் பெட் இயக்குனர் ரோனென் பார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மார்ச் 10 ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்பே இஸ்ரேல்-ஹமாஸ் போரில் போர்நிறுத்தம் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

    அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது மற்றும் இறந்தவர்களின் உடல்களை திருப்பி அனுப்புவது உட்பட இஸ்ரேல் முன்வைத்த அனைத்து ஆலோசனைகளுக்கும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இஸ்ரேல்

    பட்டினியில் வாடும் பாலஸ்தீனர்கள் 

    ஒப்பந்தம் நிறைவேறாத பட்சத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் வசிக்கும் காசாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேலிய துருப்புக்களின் தரைவழித் தாக்குதலை நெதன்யாகு முடுக்கிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போரின் போது வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இஸ்ரேல் தரப்பும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

    நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஒரு குடும்பம், பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக அவர்களது இரண்டு குதிரைகளைக் கொன்றதாக பேசப்படுகிறது.

    போர் ஆரம்பமானது முதல், மோதலில் சிக்கியவர்களுக்கு உணவு மற்றும் உதவி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    2.2 மில்லியன் நபர்கள் அங்கு பட்டினியால் தத்தளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை(UN) எச்சரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்

    சமீபத்திய

    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்  வெளியுறவுத்துறை
    ஹமாஸூக்கு எதிராக போரைத் தொடரும் முடிவில் இஸ்ரேல் இஸ்ரேல்
    "ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல்
    காசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீது, ஐநா சபை நாளை வாக்களிக்கிறது இஸ்ரேல்

    இஸ்ரேல்

    ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா போர் நிறுத்தம் கோரும் ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது  ஐநா சபை
    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை ஜோ பைடன்
    ஹமாஸிடம் பணய கைதிகள் சிக்கிய ராணுவ வீரர்கள் உட்பட மூவரின் உடல்களை மீட்டது இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025