NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது

    ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    May 20, 2024
    09:42 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் பிற அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரில் பயணித்தவர்களிடம் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானின் அரசு ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.

    "ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்த பிறகு, ஹெலிகாப்டர் பயணிகள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

    அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் ஒரு அணையைத் திறந்து வைப்பதற்காக மே 19 அன்று ரைசி அஜர்பைஜானுக்கு சென்றிருந்தார்.

    அதன் பிறகு, அதிபர் திரும்பும் வழியில் அவரது ஹெலிகாப்டர், தெஹ்ரானில் இருந்து 600 கி.மீ தொலைவில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்பாவில் விபத்துக்குள்ளானது.

    ஈரான்

    நாட்டின் நிர்வாகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது எனஉச்ச தலைவர் உறுதி 

    அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் பிற அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், விமானம் புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களில் தொடர்பை இழந்தது. இது உடனடி கவலையை ஏற்படுத்தியதுடன் பெரிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தூண்டியது.

    ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அமைதியை காக்குமாறு மக்களிடம் வலியுறுத்தினார். நாட்டின் நிர்வாகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    "எல்லாம் வல்ல இறைவன் எங்கள் அன்பான அதிபரையும் அவரது தோழர்களையும் முழு ஆரோக்கியத்துடன் மீண்டும் தேசத்தின் கரங்களில் கொண்டு வந்து சேர்ப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா

    ஈரான்

    ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல் ஏமன்
    செங்கடலில் செல்லும் சர்வதேச வணிக கப்பல்களைத் தாக்கும் கூட்டம்: யாரிந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்? ஏமன்
    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை  பாகிஸ்தான்
    பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல்: ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான் பாகிஸ்தான்

    உலகம்

    கனடாவில் 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை கனடா
    பாலியல் ரீதியான டீப்ஃபேக் படங்கள் இங்கிலாந்தில் குற்றமாக்கப்பட உள்ளன  இங்கிலாந்து
    கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது  கனடா
    இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்  இஸ்ரேல்

    உலக செய்திகள்

    இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: இந்தியா கூறுவது என்ன? இஸ்ரேல்
    வெடிபொருட்களுடன் நடமாடிய சந்தேக நபர் கைது: பாரிஸில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுகை பாரிஸ்
    இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்  இஸ்ரேல்
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டன இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025