LOADING...
ஈரான் அதிரடி: டியாகோ கார்சியா அமெரிக்கத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்! 4,000 கிமீ பாய்ந்த ஏவுகணைகள்
டியாகோ கார்சியா அமெரிக்கத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

ஈரான் அதிரடி: டியாகோ கார்சியா அமெரிக்கத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்! 4,000 கிமீ பாய்ந்த ஏவுகணைகள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2026
01:40 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் முதல்முறையாக இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரிட்டன் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் எல்லையிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தத் தளத்தைத் தாக்கியதன் மூலம், ஈரான் தனது ஏவுகணை வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

பின்னணி

தாக்குதலின் பின்னணி

அமெரிக்க அதிகாரிகள் அளித்த தகவலின்படி, ஈரானால் ஏவப்பட்ட இரண்டு நடுத்தர தூர ஏவுகணைகளும் இலக்கைத் துல்லியமாகத் தாக்கவில்லை என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. நடுவானிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்தது. அமெரிக்கப் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட SM-3 இடைமறிப்பு ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.

முக்கியம்

டியாகோ கார்சியா தளம் ஏன் முக்கியமானது?

மத்திய இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தத் தளம், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா முழுவதையும் கண்காணிக்கும் அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவ மையமாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களின் போது அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் இங்கிருந்துதான் கிளம்பின. தற்போது ஈரானுக்கு எதிரான போரில் பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement

ஈரான் மிரட்டல்

சுற்றுலாத் தலங்களுக்கு ஈரான் மிரட்டல்

ஈரான் தனது தாக்குதலை விரிவுபடுத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா கூடுதல் போர்க்கப்பல்களை இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததால், ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

பாதிப்பு

உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் தற்போது ஒரு மாதத்தை நெருங்கியுள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதல்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெர்சிய புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தெஹ்ரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இது உணவு மற்றும் எரிபொருள் விலையை உலகளவில் உயர்த்தியுள்ளது.

Advertisement