NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மீண்டும் சீனாவில் பரவும் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ்-பீதியில் உலக நாடுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் சீனாவில் பரவும் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ்-பீதியில் உலக நாடுகள்
    ஊரடங்கை தளர்த்திய சீனா

    மீண்டும் சீனாவில் பரவும் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ்-பீதியில் உலக நாடுகள்

    எழுதியவர் Nivetha P
    Dec 31, 2022
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தியது.

    3 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒமிக்ரானின் மாறுபட்ட பிஎப்7 என்னும் கொரோனா தொற்று அதிகளவில் சீனாவில் பரவத் துவங்கியுள்ளது.

    ஜப்பான், ஹாங்காங் போன்ற நாடுகளிலும் இதன் பரவல் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவிலும் இதன் தொற்று பரவிய சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்.

    சீனாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், அங்குள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற சீன அரசு, ஊரடங்கு நடவடிக்கையை தளர்த்தியுள்ளது.

    அதே போல், அங்குள்ள கொரோனா பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பிற்கு இனி தகவல் அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    அங்குள்ள மக்கள் கொரோனாவோடு இணைந்து வாழ பழகிவிட்டார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.

    தொற்று பாதித்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் சீன மக்கள்

    கொரோனா நிலை குறித்து கூறும் சீனாவில் உள்ள இந்திய மருத்துவ மாணவர்கள்

    இந்நிலையில் சீனாவில் நமது இந்திய மருத்துவ மாணவர்கள் அங்குள்ள நிலை குறித்து சில தகவல்களை அளித்துள்ளனர்.

    அதன்படி, ஒரு மருத்துவ மாணவர் கூறுகையில், "சீனாவில் மக்களுக்கு அதன் மேல் இருந்த பயம் போய்விட்டது.

    பெரும்பாலானோர் தொற்று பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்கிறார்கள்.

    ஊரடங்கு இல்லாததால் தொற்று பரவல் அதிகமாக தான் உள்ளது" என்று கூறியுள்ளார்.

    மற்றொருவர், "நாங்கள் வழக்கம் பொது இடங்களுக்கு சென்று வருகிறோம். 'முக கவசம்' கட்டாயம் இல்லை என்ற நிலையிலும், தங்களை பாதுகாத்து கொள்ள மக்கள் அணிகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

    மேலும் "இங்கு தேர்வுகளும் நாம் நினைக்குமாறு வீட்டிலும் எழுதலாம், விரும்பினால் நேராக சென்றும் எழுதலாம் என்னும் நிலை தான் உள்ளது" என்று இன்னொரு மாணவி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    சீனா

    சமீபத்திய

    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! இந்தியா
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! இந்தியா

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! வைரஸ்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா
    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025