NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர் 
    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர் 
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர் 

    எழுதியவர் Sindhuja SM
    May 01, 2023
    07:48 pm
    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர் 
    அந்த மூன்று சிறுவர்களும் 13 வயதுடையவர்கள் ஆவர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்க-இந்தியர் ஒருவர், ஜனவரி 2020இல், 13 வயதுடைய மூன்று சிறுவர்களைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள் பயணித்த கார் மீது அனுராக் சந்திரா என்பவர் வேண்டுமென்றே மோதியதாகவும், இதனால் அந்த காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. உயிரிழந்த சிறுவர்களான டேனியல் ஹாக்கின்ஸ், டிரேக் ரூயிஸ் மற்றும் ஜேக்கப் இவாஸ்கு ஆகியோர் செர்ஜியோ காம்புசானோ(18) என்பவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டது. அந்த மூன்று சிறுவர்களும் 13 வயதுடையவர்கள் ஆவர். அந்த சிறுவர்கள், சந்திராவின் வீட்டு காலிங் பெல்லை அடித்து குறும்புத்தனம் செய்திருக்கின்றனர். இதனால், கோபடைந்த அனுராக் சந்திரா அவர்களை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.

    2/2

    மூன்று கொலை வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் 

    சம்பவத்திற்கு முன்பு 12 பீர்களை குடித்ததாகவும், அவர்களின் குறும்புத்தனத்தால் கோபமடைந்ததாகவும் சந்திரா சாட்சியம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவர்களைத் துரத்திச் சென்ற அனுராக் சந்திரா, அவர்களின் காரைப் பின்தொடர்ந்திருக்கிறார். மேலும், அவர்களின் கார் மீது மோதுவதற்கு முன், 159 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதாக சந்திரா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அதற்கு பின், கோபத்தில் அவர்களது காரில் மோதிய அவர், சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டது தெரியாமல் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். மூன்று கொலை மற்றும் மூன்று கொலை முயற்சி வழக்குகளில் அவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    இந்தியா

    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  ஜம்மு காஷ்மீர்
    தமிழ்நாட்டில் மதமாற்றம் செய்யப்படுகிறதா: உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு தமிழ்நாடு
    'மனதின் குரல்': பில் கேட்ஸ்க்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி  மோடி
    கிரேட் நிக்கோபார் தீவு திட்டம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அந்தமான் நிக்கோபார்

    அமெரிக்கா

    ஸ்மார்ட்வாட்ச் பயனர்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு! ஆப்பிள்
    இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC இந்தியா
    நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா!  நாசா
    வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன்  வட கொரியா

    உலகம்

    தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு  தமிழ்நாடு
    பிபிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிச்சர்ட் ஷார்ப்  இங்கிலாந்து
    மிருகங்களை தெய்வங்களாக வணங்கும் வித்தியாசமான கோவில்கள் கோவில்கள்
    பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க் உலக செய்திகள்

    உலக செய்திகள்

    சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்  இந்தியா
    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  இந்தியா
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   சிங்கப்பூர்
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  சூடான்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023