NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா 

    ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 14, 2023
    09:30 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தங்கி படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி, ஜானவி கந்துலா.

    இவர் கடந்த ஜனவரி மாதம், சவுத் லேக் யூனியனில் சாலையை கடந்தபோது போலீசாரின் ரோந்து வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

    இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில், நேற்று ஒரு வீடியோ வெளியானது.

    சம்பவ இடத்தில் விசாரணையின்போது பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோ, காவல்துறை அதிகாரிகளின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த பாடிகேம்-இல் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது.

    அதில், விபத்து தொடர்பாக போலீஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்திய மேலதிகாரி ஒருவர், அந்த பெண் தான் இறந்துவிட்டாளே என்று சிரித்தபடி பேசுவது போல சத்தம் கேட்கிறது.

    card 2

    விசாரணை கோரும் இந்திய தூதரகம்

    அந்த வீடியோவில் மேலும் இறந்த பெண்ணைப் பற்றி கேலியாக சிரித்துக்கொண்டே "ஒரு செக் எழுதுங்கள், 11 ஆயிரம் டாலர்கள்.. அந்த பெண்ணுக்கு எப்படியும் 26 வயது தான். அவளுக்கு குறைந்த அளவு மதிப்பே இருக்கும்" என அந்த அதிகாரி பேசுவது கேட்கிறது.

    காவல் அதிகாரியின் இந்த விமர்சனம், பலத்த கண்டனங்களை ஈர்த்துவருகிறது.

    "இது கண்டனத்துக்குரியது" என கூறும் அமெரிக்காவின் இந்திய தூதரகம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பேசி வருவதாக கூறியுள்ளது.

    விபத்தில் பலியான ஜானவி கந்துலா, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சவுத் லேக் யூனியனில் உள்ள நார்த்ஈஸ்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    விசாரணை கோரும் இந்தியா

    .. for a thorough investigation & action against those involved in this tragic case.
    The Consulate & Embassy will continue to closely follow up on this matter with all concerned authorities.@IndianEmbassyUS @MEAIndia

    — India in SF (@CGISFO) September 13, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    அமெரிக்கா

    அமெரிக்காவில் அதிகரிக்கும் EG.5 கொரோனா தொற்று; இரண்டே வாரத்தில் 12 சதவீதம் உயர்வு கொரோனா
    'எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் சீன பொருளாதாரம்' : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனா
    ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு உலகம்
    ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு உலகம்

    வைரல் செய்தி

    ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் மகளுக்கு திருமணமா? கோலிவுட்
    தோனி கேண்டி கிரஷ் விளையாடுவாரா! வைரலாகும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் எம்எஸ் தோனி
    விவாகரத்து குறித்த செய்திகளுக்கு நடிகை அசினின் பதில்  கோலிவுட்
    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்  சிவகார்த்திகேயன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025