NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா 
    ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா 
    உலகம்

    ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா 

    எழுதியவர் Venkatalakshmi V
    September 14, 2023 | 09:30 am 1 நிமிட வாசிப்பு
    ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா 

    அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தங்கி படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி, ஜானவி கந்துலா. இவர் கடந்த ஜனவரி மாதம், சவுத் லேக் யூனியனில் சாலையை கடந்தபோது போலீசாரின் ரோந்து வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில், நேற்று ஒரு வீடியோ வெளியானது. சம்பவ இடத்தில் விசாரணையின்போது பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோ, காவல்துறை அதிகாரிகளின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த பாடிகேம்-இல் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், விபத்து தொடர்பாக போலீஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்திய மேலதிகாரி ஒருவர், அந்த பெண் தான் இறந்துவிட்டாளே என்று சிரித்தபடி பேசுவது போல சத்தம் கேட்கிறது.

    விசாரணை கோரும் இந்திய தூதரகம்

    அந்த வீடியோவில் மேலும் இறந்த பெண்ணைப் பற்றி கேலியாக சிரித்துக்கொண்டே "ஒரு செக் எழுதுங்கள், 11 ஆயிரம் டாலர்கள்.. அந்த பெண்ணுக்கு எப்படியும் 26 வயது தான். அவளுக்கு குறைந்த அளவு மதிப்பே இருக்கும்" என அந்த அதிகாரி பேசுவது கேட்கிறது. காவல் அதிகாரியின் இந்த விமர்சனம், பலத்த கண்டனங்களை ஈர்த்துவருகிறது. "இது கண்டனத்துக்குரியது" என கூறும் அமெரிக்காவின் இந்திய தூதரகம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பேசி வருவதாக கூறியுள்ளது. விபத்தில் பலியான ஜானவி கந்துலா, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சவுத் லேக் யூனியனில் உள்ள நார்த்ஈஸ்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விசாரணை கோரும் இந்தியா

    .. for a thorough investigation & action against those involved in this tragic case.
    The Consulate & Embassy will continue to closely follow up on this matter with all concerned authorities.@IndianEmbassyUS @MEAIndia

    — India in SF (@CGISFO) September 13, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அமெரிக்கா
    வைரல் செய்தி

    அமெரிக்கா

    இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன்  இந்தியா
    19 வயதிலேயே முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காஃப் டென்னிஸ்
    தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா? செயற்கை நுண்ணறிவு
    இரயில்வே மற்றும் துறைமுக கட்டுமான திட்டங்களில் கையெழுத்திடவிருக்கும் இந்தியா மற்றும் சவுதி அரேபியா? இந்தியா

    வைரல் செய்தி

    நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன் நடிகர்
    10 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வராகவனுக்கு பதிலளித்த த்ரிஷா - வைரலாகும் ட்வீட்  ட்விட்டர்
    'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் ஏஆர் ரஹ்மான்
    நீளமான முடியுடன் மீண்டும் வின்டேஜ் லுக்கிற்கு மாறிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி எம்எஸ் தோனி
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023