NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர்
    இனவெறுப்பினால் அந்த வெள்ளையர் கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர்

    எழுதியவர் Sindhuja SM
    Aug 27, 2023
    01:06 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா: சனிக்கிழமையன்று புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை ஒரு வெள்ளையர் சுட்டு கொன்றார்.

    இனவெறுப்பினால் அந்த வெள்ளையர் கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    "இந்த துப்பாக்கிச் சூடு இன ரீதியான வெறுப்பினால் தூண்டப்பட்டது. குற்றம்சாட்டப்பவருக்கு கறுப்பின மக்கள் மீது வெறுப்பு இருந்திருக்கிறது" என்று ஜாக்சன்வில் ஷெரீப் டி.கே. வாட்டர்ஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    ஆனால், குற்றம்சாட்டப்பவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

    கறுப்பினத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை சுட்டு கொன்ற அவர், பின்பு தன்னை தானே சுட்டு கொண்டார்.

    துவ்

    கறுப்பின கல்லூரி அருகே இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது 

    துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனியாகச் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு அவர், ஊடகங்கள், அமலாக்கப் பிரிவினர் ஆகியோருக்கு கறுப்பின மக்கள் மீதான வெறுப்பை விவரிக்கும் "பல அறிக்கைகளை" எழுதி இருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    AR-15 போன்ற துப்பாக்கியை குற்றம்சாட்டப்பட்டவர் பயன்படுத்தியதாகவும், அதில் ஸ்வஸ்திகாக்கள்(ஹிட்லர்-நாட்சிகளுடன் தொடர்புடைய ஒரு குறியீடு) பொறிக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எட்வர்ட் வாட்டர்ஸ் பல்கலைக்கழகம் என்ற கறுப்பின கல்லூரி அருகே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது.

    பல்வேறு இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் அமெரிக்காவில், கருப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னும் குறையவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    துப்பாக்கி சூடு
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    சியாட்டில் நகரில் நடந்த துப்பாக்கி சூடு - 5 பேர் பலி  காவல்துறை
    உணவகத்தில் கொள்ளையடித்த நபரைக் கண்டறிய உதவிய ஆப்பிள் ஏர்டேக் ஆப்பிள் தயாரிப்புகள்
    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய-அமெரிக்கர்: யாரிந்த ஹிர்ஷ் வர்தன் சிங்? உலகம்
    மொபைல் குறுஞ்செய்தி சேவையில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள் ஸ்மார்ட்போன்

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    உலகம்

    இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி இத்தாலி
    பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு பாகிஸ்தான்
    சீனாவில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளைத் தடை செய்யும் அமெரிக்கா அமெரிக்கா
    மாறுபாடு அடைந்த புதிய வகை 'எரிஸ்' கொரோனா - உலக சுகாதார அமைப்பு தகவல்  கொரோனா

    உலக செய்திகள்

    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  மியான்மர்
    சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி  சீனா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா
    இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025