LOADING...
10 நாடுகள், 15 ராஜினாமாக்கள்! உலகையே அதிரவைக்கும் 'எப்ஸ்டீன் கோப்புகள்'; சிக்கிய அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்கள் யார்?
டொனால்ட் டிரம்ப் உடன் ஜெப்ரி எப்ஸ்டீன்

10 நாடுகள், 15 ராஜினாமாக்கள்! உலகையே அதிரவைக்கும் 'எப்ஸ்டீன் கோப்புகள்'; சிக்கிய அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்கள் யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2026
04:48 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க நிதி ஆலோசகர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தொடர்புடைய 15 உயர்மட்ட அதிகாரிகள் இதுவரை 10 நாடுகளில் ராஜினாமா செய்துள்ளனர்; மேலும் 80 முக்கிய நபர்கள் மீது விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக பிரிட்டனில் முன்னாள் தூதர் பீட்டர் மாண்டெல்சன் மற்றும் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமை அதிகாரி மோர்கன் மெக்ஸ்வீனி ஆகியோர் பதவி விலகியுள்ளனர். ஸ்லோவாக்கியா, ஸ்வீடன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் தூதர்களும், அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

சிக்கியவர்கள்

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய முக்கிய புள்ளிகள்

வெளியான ஆவணங்களில் சுமார் 100 அரசியல்வாதிகள், 200 கோடீஸ்வரர்கள் மற்றும் அரச குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பில் கேட்ஸ்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், எப்ஸ்டீனுடன் தான் கொண்ட தொடர்பிற்கு வருத்தம் தெரிவித்து, தனது அறக்கட்டளை வாரியத்தில் இருந்து விலகியுள்ளார். டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் இந்த ஆவணங்களில் 38,000 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. 1990-களில் எப்ஸ்டீனின் தனி விமானத்தில் அவர் பலமுறை பயணம் செய்துள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன. நோர்வே இளவரசி: நோர்வேயின் இளவரசி மெட்டே-மேரிட், எப்ஸ்டீனுடனான தொடர்புக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

நடவடிக்கை

அரசுகள் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதுடன், இளவரசர் ஆண்ட்ரூ மீதான புகார்களை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். பிரான்ஸ், போலந்து, லாட்வியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மனித கடத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுக்களை அமைத்துள்ளன. எப்ஸ்டீனின் இந்த பாலியல் குற்ற பின்னணி வலையமைப்பு குறைந்தது 15 நாடுகளில் பரவியிருந்தது தற்போது உறுதியாகியுள்ளது. சுமார் 700 முதல் 1000 செல்வாக்குமிக்க நபர்கள் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததற்கான மின்னஞ்சல்கள், விமான பயண பதிவுகள் மற்றும் தொடர்பு பட்டியல்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement