NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம்
    மருத்துவ கவனிப்பு பற்றாக்குறையால் சிகிச்சையளிக்கக்கூடிய பல நோயாளிகள் இறக்க நேரலாம்: அறிக்கை

    புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 19, 2023
    05:34 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த மாத புத்தாண்டு விடுமுறையின் போது சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் ஒரு நாளைக்கு 36,000 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று புதிதாக வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது. சந்திர புத்தாண்டு விடுமுறை நாட்களில் சீனா ஒரு நாளைக்கு 36,000 கொரோனா இறப்புகளைக் எதிர்கொள்ளலாம் என்று இங்கிலாந்தை சேர்ந்த ஏர்ஃபினிட்டி பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.

    கடந்த டிசம்பர் 29ஆம் தேதி இந்த நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டில் 25000 இறப்புகள் ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதே மதிப்பாய்வு தற்போது புதுப்பிக்கப்பட்டு 11,000 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு சீனா தனது ஜீரோ கோவிட் கொள்கையை தளர்த்தியத்தில் இருந்தே கொரோனா பரவல் அங்கு தீவிரமடைந்திருக்கிறது.

    மேலும், பயணம் செய்வதற்கு இருந்த கட்டுப்பாடுகளும் புத்தாண்டு விடுமுறைக்காக தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

    கொரோனா

    சீன சுகாதார அமைப்பிற்கு எச்சரிக்கை

    இந்த புதுப்பிக்கப்பட்ட மதிப்பாய்வு சீன பிராந்திய மாகாணங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சுகாதாரத் தகவலின் அடிப்படையிலும் கட்டுப்பாடுகளை தளர்த்திய பிற ஜீரோ கோவிட் நாடுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டுள்ளது.

    பாரம்பரிய விடுமுறையின் போது மில்லியன் கணக்கான மக்கள் பயணம் செய்வதால், கொரோனா பரவல் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் என்று கூறுவதை விட சீனா "ஒரு நீண்ட, கடுமையான கோவிட் அலைக்கு" தள்ளப்படும் என்று அந்த மதிப்பாய்வில் கூறப்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சிரமப்பட்டு வரும் சீன நாட்டின் சுகாதார அமைப்பை ஏர்ஃபினிட்டியின் அறிக்கை எச்சரித்திருகிறது.

    "நெரிசலான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கவனிப்பு பற்றாக்குறையால் சிகிச்சையளிக்கக்கூடிய பல நோயாளிகள் இறக்கக்கூடும்." என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! உலகம்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா

    உலகம்

    சமூக ஊடகங்களால் தங்கள் சொந்த உடல் தோற்றத்தை வெறுக்கும் குழந்தைகள்: ஆய்வு உலகம்
    பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயு விற்பனை! உலகம்
    உலகம் முழுவதும் சீனாவுக்கு கட்டுப்பாடுகள்: கொந்தளிக்கும் சீனா! சீனா
    ஆண்ட்ரூ டேட்டிற்கு ஆதரவளிக்கிறதா தாலிபான்? உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025