NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம்
    உலகம்

    புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம்

    புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 19, 2023, 05:34 pm 0 நிமிட வாசிப்பு
    புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம்
    மருத்துவ கவனிப்பு பற்றாக்குறையால் சிகிச்சையளிக்கக்கூடிய பல நோயாளிகள் இறக்க நேரலாம்: அறிக்கை

    இந்த மாத புத்தாண்டு விடுமுறையின் போது சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் ஒரு நாளைக்கு 36,000 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று புதிதாக வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது. சந்திர புத்தாண்டு விடுமுறை நாட்களில் சீனா ஒரு நாளைக்கு 36,000 கொரோனா இறப்புகளைக் எதிர்கொள்ளலாம் என்று இங்கிலாந்தை சேர்ந்த ஏர்ஃபினிட்டி பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 29ஆம் தேதி இந்த நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டில் 25000 இறப்புகள் ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதே மதிப்பாய்வு தற்போது புதுப்பிக்கப்பட்டு 11,000 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சீனா தனது ஜீரோ கோவிட் கொள்கையை தளர்த்தியத்தில் இருந்தே கொரோனா பரவல் அங்கு தீவிரமடைந்திருக்கிறது. மேலும், பயணம் செய்வதற்கு இருந்த கட்டுப்பாடுகளும் புத்தாண்டு விடுமுறைக்காக தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

    சீன சுகாதார அமைப்பிற்கு எச்சரிக்கை

    இந்த புதுப்பிக்கப்பட்ட மதிப்பாய்வு சீன பிராந்திய மாகாணங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சுகாதாரத் தகவலின் அடிப்படையிலும் கட்டுப்பாடுகளை தளர்த்திய பிற ஜீரோ கோவிட் நாடுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டுள்ளது. பாரம்பரிய விடுமுறையின் போது மில்லியன் கணக்கான மக்கள் பயணம் செய்வதால், கொரோனா பரவல் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் என்று கூறுவதை விட சீனா "ஒரு நீண்ட, கடுமையான கோவிட் அலைக்கு" தள்ளப்படும் என்று அந்த மதிப்பாய்வில் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சிரமப்பட்டு வரும் சீன நாட்டின் சுகாதார அமைப்பை ஏர்ஃபினிட்டியின் அறிக்கை எச்சரித்திருகிறது. "நெரிசலான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கவனிப்பு பற்றாக்குறையால் சிகிச்சையளிக்கக்கூடிய பல நோயாளிகள் இறக்கக்கூடும்." என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு இந்தியா

    சீனா

    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் உலகம்

    உலகம்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது அமெரிக்கா
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023