NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது: சீனா எதிர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது: சீனா எதிர்ப்பு
    ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு அமித்ஷா செல்கிறார்

    அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது: சீனா எதிர்ப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2023
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்வதை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.

    அருணாச்சல பிரதேசத்திற்கு அமித்ஷா செல்வது பெய்ஜிங்கின் ராஜ்ய இறையாண்மையை மீறுவதற்கு சமம் என்று சீன வெளியுறவுதுறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இன்று(ஏப் 10) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    கடந்த வாரம், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த சில பகுதிகளுக்கு சீனா "மறுபெயரிட்டது".

    உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், "ஜாங்னான் சீனாவின் பகுதி" என்று கூறியுள்ளார்.

    ஜாங்னான் என்பது சீனா, அருணாச்சலுக்கு வைத்திருக்கும் பெயராகும்.

    "ஜாங்னானுக்கு இந்திய அதிகாரி பயணம் செய்வது சீனாவின் ராஜ்ய இறையாண்மையை மீறுவதாகும். இது எல்லையில் நிலவும் அமைதிக்கு உகந்தது அல்ல." என்று அவர் தெரிவித்துள்ளார்.

    details

    அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பிரிக்க முடியாத பகுதி

    ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அருணாச்சலப் பிரதேசத்திற்குச் செல்லும் அமித்ஷா, இந்திய-சீன எல்லையில் உள்ள கிபித்தூ என்ற கிராமத்தில் 'வைப்ரன்ட் கிராமங்கள் திட்டத்தை' தொடங்கி வைக்கிறார்.

    அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பிரிக்க முடியாத பகுதி என்றும், புதிதாக பெயர்கள் வைப்பது இந்த யதார்த்தத்தை மாற்றாது என்றும் இந்தியா தனது நிலைப்பாட்டை கூறி வருகிறது.

    "இத்தகைய அறிக்கைகளை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சீனா இப்படிப்பட்ட முயற்சியை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. இதை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. புதிதாக பெயர்கள் வைப்பது இந்த யதார்த்தத்தை மாற்றாது." என்று 'பெயர் மாற்றப்பட்டதற்கு' இந்தியா பதிலத்திருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    அருணாச்சல பிரதேசம்
    இந்தியா-சீனா மோதல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் பாஜக
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து பஞ்சாப்
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிக்கை தமிழ்நாடு
    அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு மன்சுக் மாண்டவியா

    சீனா

    இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா: செயற்கைகோள் படங்கள் இந்தியா-சீனா மோதல்
    சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவு உலக செய்திகள்
    10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா கனடா
    5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் ஹாங்காங் உலகம்

    அருணாச்சல பிரதேசம்

    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு இந்திய ராணுவம்
    அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா இந்தியா
    அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு இந்தியா

    இந்தியா-சீனா மோதல்

    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! சீனா
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025