NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் வேட்பாளர்கள் அலுவலகத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் வேட்பாளர்கள் அலுவலகத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி

    பாகிஸ்தான் வேட்பாளர்கள் அலுவலகத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2024
    04:07 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களால் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர்.

    பிஷின் மாவட்டத்தின் சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே இன்று சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இது அந்நாட்டில் இன்று நடந்த முதல் குண்டுவெடிப்பாகும். அதில், 17 பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர்.

    அது நடந்து ஒரு மணி நேரத்திற்குள், கில்லா அப்துல்லா பகுதியில் உள்ள ஜமியத்-உலேமா இஸ்லாம்-பாகிஸ்தானின் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது. அதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர்.

    பாகிஸ்தான் 

    பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு 

    வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே வெடித்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டது. அது கட்டிடத்திற்கு வெளியே ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக குவெட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    "வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க, பயங்கரவாதிகள் தேர்தல் வேட்பாளர்களை குறிவைக்கின்றனர். ஆனால் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது." என்று பலுசிஸ்தான் பஞ்ச்கூரில் மூத்த போலீஸ் அதிகாரி அப்துல்லா செஹ்ரி கூறியுள்ளார்.

    இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததையும் உறுதி செய்துள்ள, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்(ECP) வியாழனன்று நடைபெறவுள்ள தேர்தலுக்காக பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா இந்தியா
    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    364 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் விற்றதாக தகவல் ரஷ்யா
    ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான்

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025