NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
    இந்த வைரஸால் இதுவரை உலகளவில் 6,894,809-பேர் உயிரிழந்துள்ளனர்.

    'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 28, 2023
    11:47 am

    செய்தி முன்னோட்டம்

    சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், "மக்களைப் பாதிக்கும் வகையில் கொரோனா வைரஸை வேண்டுமென்றே உருவாக்கி பரப்பியது சீனா தான்" என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

    தனது சக-ஊழியர்களிடம் நான்கு விதமான வைரஸ்கள் வழங்கப்பட்டது என்றும், அவற்றுள் எந்த வைரஸ் நன்றாக பரவும் என்பதை கண்டறிய கேட்டு கொண்டனர் என்றும் சாவோ-ஷாவோ என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

    மிக அதிகமாக பரவிய இந்த வைரஸால் இதுவரை உலகளவில் 6,894,809-பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கு முன்பும் பலமுறை சீனா மீது இந்த குற்றசாட்டு வைக்கப்பட்டிருந்தாலும், வுஹானில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சியாளர் இப்படி கூறுவது இதுவே முதல்முறையாகும்.

    பிசிஜிக்ஸ்

     "உயிரியல் ஆயுதம்": கொரோனவை திட்டமிட்டு பரப்பியதா சீனா?

    சர்வதேச செய்தியாளர் சங்கத்தின் உறுப்பினரான ஜெனிஃபர் ஜெங்குடனான ஒரு பிரத்யேக நேர்காணலில் வுஹானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சாவோ ஷாவோ இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

    கொரோனா வைரஸை "உயிரியல் ஆயுதம்" என்று கூறிய சாவோ ஷாவோ, தனது மேலதிகாரி தங்களிடம் நான்கு விதமான வைரஸைக் கொடுத்ததாகவும், அவற்றுள் எது எளிதாக உயிரினங்களுக்கு பரவும் என்பதை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், "2019 வுஹானில் நடந்த இராணுவ உலக விளையாட்டுப் போட்டியின் போது, எனது சக-ஊழியர்களில் ஒருவர், உடல்நலம் மற்றும் சுகாதார நிலைமைகளை சரிபார்க்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டார். சுகாதாரத்தை சரிபார்க்க வைராலஜிஸ்டுகள் தேவையில்லை என்பதால், அவர் வைரஸை பரப்புவதற்காகவே அங்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்" என்றும் சாவோ-ஷாவோ தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்
    கொரோனா

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    சீனா

    சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை  உலகம்
    சீனாவுக்கு பதிலடி: இந்திய-சீன எல்லையில் சுற்றுலா தலங்களை அமைக்க இந்தியா முடிவு  இந்தியா
    ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?  ஸ்மார்ட்போன்
    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான் பாகிஸ்தான்

    உலகம்

    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    மக்களுக்கு அதிக செலவு வைக்கும் இந்திய நகரங்களின் பட்டியல்: மும்பைக்கு முதலிடம்  மும்பை
    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலக செய்திகள்
    இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு  இந்தோனேசியா

    உலக செய்திகள்

    சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்தது கனடாவின் பிராம்ப்டன் நகராட்சி கனடா
    அமெரிக்க ஸ்பெல்லிங் பீ பட்டத்தை வென்ற இந்திய-அமெரிக்க சிறுவன்  உலகம்
    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி  இந்தியா
    ஹிட்லரின் பென்சில் ஜூன் 6ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது உலகம்

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 1,223 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 801 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 656 கொரோனா பாதிப்பு: 12 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,021 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025