இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது: பில் கேட்ஸ் புகழாரம்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், அமெரிக்க தொழிலதிபருமான பில் கேட்ஸ், பெரிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேற்று பதிவிட்ட "கேட்ஸ் நோட்ஸ்" என்ற அவரது வலைப்பதிவில், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது என்று கேட்ஸ் கூறியுள்ளார். மேலும், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவரான இவர், உலக சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் முன்னேற்றம் அடைய வேண்டிய தற்போதைய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தருவதாகவும், உலக நெருக்கடிகள் போன்ற பெரிய பிரச்சினைகளை இந்தியா தீர்த்து காட்டி இருப்பதாகவும் பில் கேட்ஸ் கூறி இருக்கிறார்.
பில் கேட்ஸ் தனது வலைப்பதிவில் கூறி இருப்பதாவது:
இந்தியா, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறப்போகிறது-அதாவது, இந்தியாவின் பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்காமல் உங்களால் எந்த பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்ற நிலை வரப்போகிறது. ஆனாலும், இந்தியா பெரிய சாவல்களை சமாளிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அந்நாடு போலியோவை ஒழித்தது, HIV பரவலை குறைத்தது, வறுமையை குறைத்தது, குழந்தைகள் இறப்பதை குறைத்தது, நிதி மற்றும் சுகாதார சேவைகளின் அணுகலை அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றமும் உலகளாவிய ஆரோக்கியமும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டையும் ஒரே நேரத்தில் தீர்க்க போதுமான நேரமும் பணமும் இல்லை என்று பிறர் கூறுகிறார்கள். பருவநிலை மாற்றத்தில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இன்றைய மிகப்பெரிய சவால்களில் முன்னேற்றம் காண்பதில் இந்தியா முக்கிய அங்கமாக இருக்கிறது. என்று கூறியுள்ளார்.