Page Loader
ஷேக் ஹசீனாவின் அரண்மனை புரட்சியை கௌரவிக்கும் அருங்காட்சியகமாக மாற்ற பங்களாதேஷ் அரசு முடிவு
ஷேக் ஹசீனாவின் அரண்மனை புரட்சியை கௌரவிக்கும் அருங்காட்சியகமாக மாற்றும் பங்களாதேஷ் அரசு

ஷேக் ஹசீனாவின் அரண்மனை புரட்சியை கௌரவிக்கும் அருங்காட்சியகமாக மாற்ற பங்களாதேஷ் அரசு முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 28, 2024
07:31 pm

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷின் வெளியேற்றப்பட்ட தலைவரான ஷேக் ஹசீனாவின் முன்னாள் அரண்மனை ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இது அவரது எதேச்சதிகார ஆட்சி மற்றும் அவர் நாடுகடத்தப்பட வேண்டிய எழுச்சியின் நினைவுகளைப் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் தற்போதைய அரசு அறிவித்துள்ளது. நோபல் பரிசு பெற்றவரும், பங்களாதேஷின் காபந்து அரசின் தலைமை ஆலோசகருமான முகமது யூனுஸால் அறிவிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், ஷேக் ஹசீனாவின் பதவி கவிழ்க்க வழிவகுத்த போராட்டக்காரர்களின் சீற்றத்தை நினைவுகூரும் வகையில் இருக்கும். அவரது 15 ஆண்டுகால ஆட்சியானது பரந்த மனித உரிமை மீறல்களைக் கொண்டதாகவும், நீதிக்கு புறம்பான கொலைகள் மற்றும் அரசியல் போட்டியாளர்களை தடுப்புக்கு காவலில் வைத்தது போன்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.

ஷேக் ஹசீனா

இந்தியாவுக்கு தப்பி வந்த ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 அன்று பங்களாதேஷில் இருந்து இந்தியாவில் தஞ்சம் கோரி மாணவர்கள் தலைமையிலான எழுச்சிக்கு மத்தியில் தப்பிச் சென்றார். அவர் தப்பித்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவரது முன்னாள் இல்லமான கணபபன் அரண்மனையை முற்றுகையிட்டு, அதை அடக்குமுறையின் சின்னன் எனக் கூறி சிதைத்தனர். இந்நிலையில், தற்போது இங்கு திட்டமிடப்பட்ட கண்காட்சிகளில், கண்ணாடிகளின் இல்லம் என்றும் அழைக்கப்படும் மோசமான அய்னகர் தடுப்பு மையத்தின் பிரதியும் உள்ளது, அங்கு கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உளவியல் துன்பங்களுக்கு ஆளாகினர். அரண்மனையில் ஒரு அறிக்கையில், ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் நடந்த அநீதிகளை அம்பலப்படுத்துவதில் அருங்காட்சியகத்தின் பங்கை யூனுஸ் வலியுறுத்தினார். யூனுஸின் செய்தித் தொடர்பாளர் அபுர்பா ஜஹாங்கீர் கூறுகையில், அருங்காட்சியகத்தின் கட்டுமானம் டிசம்பரில் தொடங்கும் என்றார்.