NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஷேக் ஹசீனாவின் அரண்மனை புரட்சியை கௌரவிக்கும் அருங்காட்சியகமாக மாற்ற பங்களாதேஷ் அரசு முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஷேக் ஹசீனாவின் அரண்மனை புரட்சியை கௌரவிக்கும் அருங்காட்சியகமாக மாற்ற பங்களாதேஷ் அரசு முடிவு
    ஷேக் ஹசீனாவின் அரண்மனை புரட்சியை கௌரவிக்கும் அருங்காட்சியகமாக மாற்றும் பங்களாதேஷ் அரசு

    ஷேக் ஹசீனாவின் அரண்மனை புரட்சியை கௌரவிக்கும் அருங்காட்சியகமாக மாற்ற பங்களாதேஷ் அரசு முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 28, 2024
    07:31 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷின் வெளியேற்றப்பட்ட தலைவரான ஷேக் ஹசீனாவின் முன்னாள் அரண்மனை ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.

    இது அவரது எதேச்சதிகார ஆட்சி மற்றும் அவர் நாடுகடத்தப்பட வேண்டிய எழுச்சியின் நினைவுகளைப் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் தற்போதைய அரசு அறிவித்துள்ளது.

    நோபல் பரிசு பெற்றவரும், பங்களாதேஷின் காபந்து அரசின் தலைமை ஆலோசகருமான முகமது யூனுஸால் அறிவிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், ஷேக் ஹசீனாவின் பதவி கவிழ்க்க வழிவகுத்த போராட்டக்காரர்களின் சீற்றத்தை நினைவுகூரும் வகையில் இருக்கும்.

    அவரது 15 ஆண்டுகால ஆட்சியானது பரந்த மனித உரிமை மீறல்களைக் கொண்டதாகவும், நீதிக்கு புறம்பான கொலைகள் மற்றும் அரசியல் போட்டியாளர்களை தடுப்புக்கு காவலில் வைத்தது போன்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.

    ஷேக் ஹசீனா

    இந்தியாவுக்கு தப்பி வந்த ஷேக் ஹசீனா

    ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 அன்று பங்களாதேஷில் இருந்து இந்தியாவில் தஞ்சம் கோரி மாணவர்கள் தலைமையிலான எழுச்சிக்கு மத்தியில் தப்பிச் சென்றார்.

    அவர் தப்பித்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவரது முன்னாள் இல்லமான கணபபன் அரண்மனையை முற்றுகையிட்டு, அதை அடக்குமுறையின் சின்னன் எனக் கூறி சிதைத்தனர்.

    இந்நிலையில், தற்போது இங்கு திட்டமிடப்பட்ட கண்காட்சிகளில், கண்ணாடிகளின் இல்லம் என்றும் அழைக்கப்படும் மோசமான அய்னகர் தடுப்பு மையத்தின் பிரதியும் உள்ளது, அங்கு கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உளவியல் துன்பங்களுக்கு ஆளாகினர்.

    அரண்மனையில் ஒரு அறிக்கையில், ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் நடந்த அநீதிகளை அம்பலப்படுத்துவதில் அருங்காட்சியகத்தின் பங்கை யூனுஸ் வலியுறுத்தினார்.

    யூனுஸின் செய்தித் தொடர்பாளர் அபுர்பா ஜஹாங்கீர் கூறுகையில், அருங்காட்சியகத்தின் கட்டுமானம் டிசம்பரில் தொடங்கும் என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    ஷேக் ஹசீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பங்களாதேஷ்

    வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு  தேர்தல்
    5வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா  பிரதமர்
    வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம் உலகம்
    பங்களாதேஷ் எம்.பி கொலை; தோலுரிக்கப்பட்ட உடல், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சதை என திடுக்கிடும் தகவல்கள் வெளியானது கொலை

    ஷேக் ஹசீனா

    பங்களாதேஷ் கொந்தளிப்புக்கு மத்தியில் அனைத்து கட்சி கூட்டம்; எம்.பி.க்களிடம் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்  பங்களாதேஷ்
    பங்களாதேஷ் நெருக்கடி: ஹோட்டலுக்கு தீ வைத்த வன்முறை கும்பல்; 24 பேர் உயிருடன் எரிப்பு  பங்களாதேஷ்
    ஷேக் ஹசீனாவின் நீட்டிக்கப்பட்ட தாங்கும் காலத்திற்கு டெல்லி எவ்வாறு தயாராகிறது பங்களாதேஷ்
    பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலுக்கு பின்னர் நாடு திரும்புவார் எனத்தகவல் பங்களாதேஷ்

    உலகம்

    இஸ்ரேல்-ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்; நிபுணர்கள் எச்சரிக்கை ஈரான் இஸ்ரேல் போர்
    போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்; இந்தியாவுக்கான ஈரான் தூதர் கோரிக்கை ஈரான் இஸ்ரேல் போர்
    இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்; வெட்கக்கேடானது என காட்டமாக வர்ணித்த இஸ்ரேலிய பிரதமர் இஸ்ரேல்
    திருடச் சென்ற வீட்டில் சமைத்து, துணிதுவைத்து வைத்துச் சென்ற வினோத திருடன்; இங்கிலாந்தில் நடந்த ருசீகர சம்பவம் இங்கிலாந்து

    உலக செய்திகள்

    2024 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டாக தேர்வு நோபல் பரிசு
    அதிபர் விளாடிமிர் புடின் பிறந்த நாளில் ரஷ்யா அரசு ஊடகத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் விளாடிமிர் புடின்
    வேலைக்கு விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பதில் கடிதம்; பிரிட்டனில் வினோத சம்பவம் பிரிட்டன்
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 4.2 டன் அளவிலான அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா நேபாளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025