NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது
    துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது
    உலகம்

    துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    February 11, 2023 | 11:03 am 1 நிமிட வாசிப்பு
    துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது
    'அயா' என்ற பெயருக்கு அரபு மொழியில் 'அதிசயம்' என்று அர்த்தமாகும்.

    கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேரை கொன்ற துருக்கி-சிரியா நிலநடுக்க இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தை தற்போது தத்தெடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், தொப்புள் கொடியுடன் தன் தாயோடு இணைக்கப்பட்ட படி ஒரு குழந்தை நிலநடுக்க இடிபாடுகளுக்கு அடியே கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குழந்தை தற்போது தத்தெடுக்கப்பட்டுள்ளது. கடுமையான நிலநடுக்கத்தின் போது இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் சிறுமியின் தாய் அஃப்ரா-அபு-ஹதியா சிக்கிக் கொண்டார். அவர் இடிபாடுகளுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டபோது அவருடைய தொப்புள் கொடி புதிதாகப் பிறந்த குழந்தையுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், மீட்கப்படுவதற்கு முன் அவர் இறந்துவிட்டார். குழந்தை மட்டும் காயங்களோடு உயிர் தப்பியது. குழந்தையின் பெற்றோரும் 4 உடன்பிறப்புகளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததுவிட்டனர். இந்த குழந்தையின் கதை பரவலாக இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.

    குழந்தையின் மறைந்த தந்தையின் மாமா அயாவை தத்தெடுக்க இருக்கிறார்

    குழந்தையின் குடும்பத்தில் அனைவரும் இறந்துவிட்டதால், குழந்தையை இனி யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற கவலை இணையவாசிகளிடேயே கவலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அந்த குழந்தை தத்தெடுக்கப்ட்டு, 'அயா' என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. 'அயா' என்ற பெயருக்கு அரபு மொழியில் 'அதிசயம்' என்று அர்த்தமாகும். குழந்தையின் செய்தி வெளியானதில் இருந்து, சமூக ஊடகங்களில் பல்லாயிரம் பேர் பிறந்த குழந்தையை தத்தெடுக்க முன்வந்தனர். ஆனால், குழந்தையின் மறைந்த தந்தையின் மாமா, சலா-அல்-பத்ரான், குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் குழந்தையைத் தத்தெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அயாவுக்கு முதுகில் ஒரு பெரும் காயம் பட்டிருந்தது. மேலும், வெப்பநிலை அங்கு குறைவாக இருப்பதால் அயா ஹைப்போதெர்மியாவால் பாதிக்கப்பட்டுள்ளாள். அதை தவிர குழந்தையின் உடல், நலமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    துருக்கி
    உலகம்

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்

    இந்திய ராணுவ வீரருக்கு அன்பாக முத்தம் கொடுத்து நன்றி தெரிவிக்கும் துருக்கிய பெண் துருக்கி
    வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி துருக்கி
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் துருக்கி

    துருக்கி

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் சிரியா
    இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர் துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய் உலகம்

    உலகம்

    கின்னஸ் சாதனை: கண்ணை மூடிக்கொண்டு பந்தை அடித்து விளையாடிய சிறுவன் அமெரிக்கா
    உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில் விண்வெளி
    இரண்டு ஆண்டு தடைக்குபின் ட்ரம்பின் கணக்குகள் மீண்டும் தொடக்கம்! தொழில்நுட்பம்
    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023