NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஸ்வீடனின் ஓரேப்ரோவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்வீடனின் ஓரேப்ரோவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொலை
    பள்ளியில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

    ஸ்வீடனின் ஓரேப்ரோவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 04, 2025
    07:28 pm

    செய்தி முன்னோட்டம்

    ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிலோமீட்டர் (125 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த தாக்குதலில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஸ்வீடிஷ் போலீசார் செவ்வாயன்று உறுதிப்படுத்தினர்.

    இந்த சம்பவம் பெரிய அளவிலான அவசர நடவடிக்கையைத் தூண்டியது. சம்பவம் நடந்த தகவல் கிடைத்ததும் ஆம்புலன்ஸ்கள், மீட்பு சேவைகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    "ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று காவல்துறை ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கு தற்போது "கொலை முயற்சி, தீ வைப்பு மற்றும் தீவிர ஆயுதக் குற்றம்" என விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    நடவடிக்கை

    மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாற்று இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்

    வன்முறையைத் தொடர்ந்து பள்ளியின் பிற பகுதிகளிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், மாணவர்கள் அருகிலுள்ள கட்டிடங்களுக்கு தங்குமிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

    "ஓரேப்ரோவில் வன்முறை பற்றிய தகவல்கள் மிகவும் தீவிரமானவை. போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர், மேலும் நடவடிக்கைகள் முழு வீச்சில் உள்ளன. அரசாங்கம் சட்ட அமலாக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது மற்றும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது" என்று நீதி அமைச்சர் குன்னர் ஸ்ட்ரோமர் ஸ்வீடிஷ் செய்தி நிறுவனமான TT இடம் தெரிவித்தார்.

    தாக்குதலுக்கு காரணமானவர், காரணம் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது தெரியவில்லை.

    இருப்பினும், ஆம்புலன்ஸ்கள், மீட்பு சேவைகள் மற்றும் காவல்துறை தற்போது சம்பவ இடத்தில் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துப்பாக்கி சூடு
    ஸ்வீடன்

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    துப்பாக்கி சூடு

    ராஜஸ்தானின் முக்கிய அரசியல் தலைவரான சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொலை ராஜஸ்தான்
    முக்கிய அரசியல் தலைவர் சுட்டு கொலை: ராஜஸ்தானில் பரபரப்பு போராட்டங்கள், கடையடைப்பு  ராஜஸ்தான்
    லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்  அமெரிக்கா
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி

    ஸ்வீடன்

    அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு நோபல் பரிசு
    குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு  நோபல் பரிசு
    நார்வே நாட்டினை சேர்ந்த ஜான் ஃபோர்ஸுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு  நோபல் பரிசு
    பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திய அமெரிக்க அறிஞருக்கு  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நோபல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025