32 வயது தமிழக இளைஞர், ஆஸ்திரேலியா போலீஸாரால் சுட்டு கொலை
சிட்னி நகரில் உள்ள ரயில் நிலையத்தில், துப்புரவுத் தொழிலாளியை கத்தியால் குத்தியதாகவும், சட்ட அமலாக்க காவல் அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறப்படும், 32 வயது இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலிய காவல்துறையினரால் நேற்று(பிப்.,28) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட இளைஞன், தமிழ்நாட்டை சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது, என்று சிட்னியில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டை பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அந்த செய்தியில், துப்புரவு பணியாளை தாக்கியபின், அங்கிருந்த காவல்நிலையத்திற்கு சென்ற அகமது, காவல்நிலையத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த இரண்டு போலீஸ் அதிகாரலையும் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் இந்தியர் சுட்டுக்கொலை
போலீஸ் துப்பாக்கிசூட்டில் இறந்த தமிழர்
அந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய போலீஸ் அதிகாரி, அகமதை நோக்கி மூன்று முறை சுட்டதாக அறிக்கை கூறுகிறது. அந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு குண்டுகள், அகமதுவின் மார்பில் தாக்கியது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அகமதுவை, உடனடியாக மருத்துவ உதவியாளர்கள் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. அகமது, துப்புரவு பணியாளரை கத்தியால் குத்தியதற்கும், காவல்துறை அதிகாரிகளை தாக்கியதற்கும் ஏதேனும் காரணம் உள்ளதா, அல்லது அகமது மனநலம் பாதிக்க பட்டிருந்தார் என்ற கோணத்திலும், தற்போது போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அகமது பிரிட்ஜிங் விசாவில் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார் என்பது கூடுதல் தகவல்.