NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / நான்கு அணிகள் கொண்ட 12 குழுக்கள் : 2026 ஃபிஃபா உலகக்கோப்பை விதிகளில் மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நான்கு அணிகள் கொண்ட 12 குழுக்கள் : 2026 ஃபிஃபா உலகக்கோப்பை விதிகளில் மாற்றம்
    2026 ஃபிஃபா உலகக்கோப்பை விதிகளில் மாற்றம்

    நான்கு அணிகள் கொண்ட 12 குழுக்கள் : 2026 ஃபிஃபா உலகக்கோப்பை விதிகளில் மாற்றம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 15, 2023
    11:36 am

    செய்தி முன்னோட்டம்

    ஃபிஃபா செவ்வாயன்று (மார்ச் 14) 2026 உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கும் வகையில் போட்டியை விரிவுபடுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன் மூலம் இதற்கு முன்பு நடந்த 64 ஆட்டங்களுக்குப் பதிலாக, 2026 இல் மொத்தம் 104 ஆட்டங்கள் இருக்கும் என்று ஃபிஃபா அறிவித்தது.

    அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து 2026 ஃபிஃபா உலகக்கோப்பையை நடத்த உள்ளது.

    முன்னதாக 3 அணிகள் கொண்ட 16 குழுவாக இந்த போட்டியின் குழுநிலை ஆட்டங்களை திட்டமிருந்த நிலையில், இது தற்போது 4 அணிகள் கொண்ட 12 குழுவாக மாற்றப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இறுதிப்போட்டி வரை முன்னேறும் அணி அதிகபட்சமாக 8 போட்டிகளில் விளையாடும். முன்னதாக இது ஏழு போட்டியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    2026 ஃபிஃபா உலகக்கோப்பை

    மாற்றம் குறித்து ஃபிஃபா அறிக்கை

    ஃபிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு :-

    விளையாட்டு ஒருமைப்பாடு, வீரர் நலன், குழு பயணம், வணிக மற்றும் விளையாட்டு ஈர்ப்பு, அத்துடன் குழு மற்றும் ரசிகர்களின் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட ஒரு முழுமையான மதிப்பாய்வின் அடிப்படையில், ஃபிஃபா கவுன்சில் 16 குழுக்களின் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 போட்டி வடிவமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

    இதன் படி நான்கு அணிகள் கொண்ட 12 குழுக்களில் இருந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு மற்றும் எட்டு சிறந்த மூன்றாவது இடங்களைப் பெறும் அணிகள் 32 சுற்றுக்கு முன்னேறும்.

    திருத்தப்பட்ட வடிவம் அணிகளுக்கு போதிய வாய்ப்பை தருவதை உறுதி செய்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    கால்பந்து

    'எனக்கு இல்லடா end';அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாட போகும் லியோனல் மெஸ்ஸி உலக கோப்பை
    கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்! இந்தியா
    ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல்நலக்குறைவால் காலமானார்! இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025