NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்!
    கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது குறித்து தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்

    கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 15, 2023
    10:19 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவின் ஸ்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2022இல் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து தேர்வுக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சேத்தன் சர்மா, இந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் அதே பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஜீ மீடியா நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றில், சேத்தன் சர்மா இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அதன் வீரர்கள் குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார்.

    குறிப்பாக, அவர் இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேத்தன் சர்மா

    சேத்தன் சர்மா பேச்சின் முழு விபரம்

    2021 டிசம்பரில் கோலி ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் டி20 தலைமை பொறுப்பையும் கைவிட முடிவு செய்த பிறகு, ரோஹித் இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இது குறித்து பேசியுள்ள சேத்தன் சர்மா, ரோஹித்தை கேப்டனாக்குவது தாங்கள் விரும்பி எடுத்த முடிவு அல்ல என்றும், பிசிசிஐ கோலியை விரைவில் வெளியேற்ற விரும்பியதால் மட்டுமே செய்யப்பட்டது என்றார்.

    நாட்டின் முதன்மையான பேட்டரை இப்படி அவமானப்படுத்தியிருக்கக்க கூடாது என அவர் கோலிக்கு ஆதரவாக அதில் பேசியிருந்தாலும், கோலி தன்னை எல்லோரையும் விட மேலாக நினைத்து தான்தோன்றித்தனமாக செயல்பட்டதால் தான் பிசிசிஐ இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    கிரிக்கெட்

    400 விக்கெட்களை வீழ்த்திய ஐந்தாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர்! முகமது ஷமி சாதனை! டெஸ்ட் கிரிக்கெட்
    இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்! 177 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா! டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை! அஸ்வின் ரவிச்சந்திரன்
    IND vs AUS 1st Test : ஜடேஜாவின் சுழலில் சிக்கியது ஆஸ்திரேலியா! முதல் நாள் முழுவதும் இந்தியா ஆதிக்கம்! டெஸ்ட் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025