LOADING...
மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட உள்ளாரா? அவரே சொன்ன பதில்
மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது தொடர்பான தகவலை நிராகரித்தார் விராட் கோலி

மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட உள்ளாரா? அவரே சொன்ன பதில்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 01, 2025
08:45 am

செய்தி முன்னோட்டம்

ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்ததைத் தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அவர் மீண்டும் திரும்புவாரா என்ற ஊகங்களுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார். இந்தப் போட்டியில், அவர் தனது 52வது ஒருநாள் சதத்தை அடித்து, ஒரு வடிவிலான போட்டியில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, அனுபவம் வாய்ந்த கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அழைக்க பிசிசிஐ பரிசீலிப்பதாக ஊகங்கள் கிளம்பின. ஆனால், ராஞ்சியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு பேசிய கோலி, தனது எதிர்காலம் குறித்த அனைத்து ஊகங்களுக்கும் ஒரு தெளிவான விளக்கத்தை அளித்தார்.

உடல் தகுதி

உடல் தகுதிதான் உந்துசக்தி

விராட் கோலி தனது விளக்கத்தில், "ஆம், அது எப்போதும் ஒருநாள் போட்டியாகத்தான் இருக்கும். நான் ஒரே ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறேன்." என்று அவர் உறுதிப்படுத்தினார். இதன் மூலம், தான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று அவர் அறிவித்தார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்தப் பகுதியில் தொடர்ந்து விளையாட எது ஊக்கமளிக்கிறது என்பது குறித்துப் பேசிய 37 வயதான கோலி, உடல் தகுதியுடனும், மனதளவில் தயாராகவும், உற்சாகமாகவும் இருப்பதும்தான் என்று கூறினார். இதற்கிடையே, கோலியின் அற்புதமான ஆட்டம் (120 பந்துகளில் 135 ரன்கள்) 2027 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் திட்டங்களில் அவர் தொடர்ந்து மையப் புள்ளியாக இருப்பதை உறுதி செய்துள்ளது.

Advertisement