NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஓய்வோ, கட்டாய நீக்கமோ கிடையாது; சிட்னி டெஸ்டில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஓய்வோ, கட்டாய நீக்கமோ கிடையாது; சிட்னி டெஸ்டில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா
    சிட்னி டெஸ்டில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா

    ஓய்வோ, கட்டாய நீக்கமோ கிடையாது; சிட்னி டெஸ்டில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 04, 2025
    08:59 am

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து விலகுவதற்கான தனது முடிவைப் பற்றி இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் ஷர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

    இதன் மூலம், சில நாட்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு தெளிவான பதிலாக இது அமைந்துள்ளது.

    அவர் இல்லாததைக் குறிப்பிட்டு, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரோஹித் ஷர்மா, இது அணியின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும், கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது ஓய்வு பெறும் நடவடிக்கை அல்ல என்றும் வலியுறுத்தினார்.

    ஜனவரி 3 அன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான ஒரு உரையாடலில், ரோஹித் ஷர்மா தனது மோசமான ஆட்டத்தை பயிற்சியாளர் கவுதம் காம்பிர் மற்றும் தேர்வாளர்களுடன் விவாதித்ததாக விளக்கினார்.

    செயல்திறன்

    பார்டர் கவாஸ்கர் டிராபியில் செயல்திறன்

    முக்கியமான போட்டிக்கு அணிக்கு நல்ல நிலையில் உள்ள வீரர்கள் தேவை என்று அவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டதாக ரோஹித் ஷர்மா கூறினார்.

    மேவும், ஐந்து இன்னிங்ஸ்களில் 6.20 சராசரியுடன் 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தனது முடிவு கடினமானது ஆனால் விவேகமானது என்பதை ஒப்புக்கொண்டார்.

    பதவி விலகுவது ஓய்வு பெறுவது அல்லது விளையாட்டில் இருந்து விலகுவது பற்றி அல்ல, மாறாக ஒரு முக்கியமான கட்டத்தில் தனது ஃபார்ம் இல்லாததை அங்கீகரிப்பதற்காக என்று இதன் பின்னணியை ரோஹித் ஷர்மா தெளிவுபடுத்தினார்.

    யதார்த்தம்

    யதார்த்தமாக இருக்க வேண்டியதன் அவசியம்

    பங்களாதேஷ் தொடரில் ஏமாற்றம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 0-3 மற்றும் தற்போதைய தொடரில் அவரது செயல்திறனைப் பற்றி சிந்தித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

    பெர்த்தில் தொடரின் தொடக்க ஆட்டத்தை தவறவிட்ட இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, மீண்டு வருவதற்கான அவரது திறமையில் நம்பிக்கை இருப்பதாக வலியுறுத்தினார், ஆனால் யதார்த்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டார்.

    2-1 என பின்தங்கிய நிலையில் தொடரை சமன் செய்யும் சவாலை இந்தியா தற்போது எதிர்கொள்கிறது.

    மேலும், இதில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரோஹித் ஷர்மா
    பார்டர் கவாஸ்கர் டிராபி
    இந்தியா vs ஆஸ்திரேலியா
    டெஸ்ட் மேட்ச்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ரோஹித் ஷர்மா

    பார்படாஸில் இருந்து இந்திய அணி நாளை டெல்லி வந்தடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்திய அணி
    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி டெல்லி வந்தடைந்தது; பிரதமரை சந்திக்கவுள்ளனர் இந்திய கிரிக்கெட் அணி
    வான்கடே மைதானத்தில் 'வந்தே மாதரம்' என பாடிய உலகக்கோப்பை வென்ற இந்திய அணி; வைரலாகும் வீடியோ  இந்திய கிரிக்கெட் அணி
    டி20 உலகக் கோப்பையை வென்றதற்கான ரூ.125 கோடி பரிசுத் தொகையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?  டி20 உலகக்கோப்பை

    பார்டர் கவாஸ்கர் டிராபி

    பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க திட்டம்; உடற்தகுதியை ஆய்வு செய்கிறது பிசிசிஐ முகமது ஷமி
    பிங்க்-பால் டெஸ்ட் போட்டி: நான்கு ஆண்டுக்கு முந்தைய தோல்விக்கு பழி தீர்க்குமா இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்
    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்; இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் விளையாடும் லெவனில் மாற்றம் இந்தியா vs ஆஸ்திரேலியா
    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு ரோஹித் ஷர்மா

    இந்தியா vs ஆஸ்திரேலியா

    பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இந்திய பந்துவீச்சு அபாரம்; 104 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் டிராபி
    பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை பார்டர் கவாஸ்கர் டிராபி
    ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி சாதனை டெஸ்ட் கிரிக்கெட்
    பார்டர் கவாஸ்கர் டிராபி: 38 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை முறியடித்தது யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்

    டெஸ்ட் மேட்ச்

    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு பார்டர் கவாஸ்கர் டிராபி
    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு; 180 ரன்களுக்கு சுருண்டது இந்தியா பார்டர் கவாஸ்கர் டிராபி
    பிங்க்-பால் டெஸ்டில் அதிவேக சதம்; தனது சாதனையை தானே முறியடித்தார் டிராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட் 5 லட்சம் ரன்கள்; வரலாற்றில் யாரும் எட்டமுடியாத சாதனை படைத்தது இங்கிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025