Loading...
வெறும் 100 ரூபாய்க்கு கால்பந்து அணி விற்பனை! ஐஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய டாடா ஸ்டீல்: சர் சர்ச்சில் பிரதர்ஸ் ஒப்பந்தம்
வெறும் 100 ரூபாய்க்கு கால்பந்து அணியை விற்பனை செய்தது டாடா ஸ்டீல்

வெறும் 100 ரூபாய்க்கு கால்பந்து அணி விற்பனை! ஐஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய டாடா ஸ்டீல்: சர் சர்ச்சில் பிரதர்ஸ் ஒப்பந்தம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 15, 2026
04:44 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் விளையாடி வந்த ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் 100 சதவீதப் பங்குகளை டாடா ஸ்டீல் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கோவாவை சேர்ந்த சர்ச்சில் பிரதர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனத்திற்கு வெறும் 100 ரூபாய் என்ற அடையாளத் தொகைக்கு இந்த பங்குகள் மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய சூப்பர் லீக் தொடரின் நேரடி அணி உரிமையாளர் பொறுப்பில் இருந்து டாடா ஸ்டீல் நிறுவனம் முழுமையாக விலகியுள்ளது. அதேவேளையில் இரண்டு முறை ஐ-லீக் சாம்பியனான சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கைமாற்றம்

12 வீரர்கள் மற்றும் பயிற்சி அமைப்புகள் கைமாற்றம்

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் ஐஎஸ்எல் விளையாட்டு உரிமம் சர்ச்சில் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாகிறது.

இதனுடன் 12 முன்னணி வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்களின் ஒப்பந்தங்களும் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுகின்றன.

வரும் செப்டம்பர் 2026 முதல் இந்த ஒப்பந்தங்களை சர்ச்சில் பிரதர்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்று நடத்தும்.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இந்த பங்குகள் மாற்றும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை பின்னணி

100 ரூபாய் விற்பனைக்கான பின்னணி மற்றும் கடன் சுமை

ஜாம்ஷெட்பூர் அணியை நிர்வகிக்கும் நிறுவனம் 2026 நிதியாண்டில் 32.23 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய போதிலும், அதன் நிகர மதிப்பு மைனஸ் 5.8 கோடி ரூபாயாக இருந்தது.

நிதி நெருக்கடி காரணமாகவே வெறும் 100 ரூபாய்க்கு இந்த அடையாளப் பங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஐஎஸ்எல் தொடரின் ஊடக ஒளிபரப்பு உரிமை மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

ஜியோஸ்டார் நிறுவனம் வழங்கிய 275 கோடி ரூபாயில் இருந்து, தற்போதைய பருவத்தில் பேன்கோடு நிறுவனம் 8.6 கோடி ரூபாய் மட்டுமே வழங்க முன்வந்துள்ளதால் இந்த வணிக சரிவு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கட்டமைப்பு

இளையோர் பயிற்சி மற்றும் அடிப்படை கட்டமைப்பில் கவனம்

வணிக ரீதியிலான லீக் தொடரிலிருந்து விலகினாலும் கால்பந்து விளையாட்டிலிருந்து டாடா ஸ்டீல் நிறுவனம் முழுமையாக விலகவில்லை.

1987 இல் தொடங்கப்பட்ட டாடா கால்பந்து அகாடமி தொடர்ந்து டாடா ஸ்டீல் நிர்வாகத்தின் கீழேயே செயல்படும்.

இதுவரை 300க்கும் மேற்பட்ட வீரர்களுக்குப் பயிற்சி அளித்துள்ள இந்த அகாடமி, அதில் 150 வீரர்களை இந்திய தேசிய அணிக்குப் பங்களிக்க வைத்துள்ளது.

இனி வரும் காலங்களில் பழங்குடியின மற்றும் உள்ளூர் கிராமப்புற இளைஞர்களின் அடிப்படை கால்பந்து திறமைகளை மேம்படுத்துவதில் மட்டும் டாடா ஸ்டீல் கவனம் செலுத்தவுள்ளது.

ADVERTISEMENT