NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஊக்கமருந்து சோதனையில் தோல்வி! இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாத தடை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊக்கமருந்து சோதனையில் தோல்வி! இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாத தடை!
    ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாத தடை

    ஊக்கமருந்து சோதனையில் தோல்வி! இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாத தடை!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 04, 2023
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர் 21 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ஹைஜெனமைன் எனும் ஊக்கமருந்தை உட்கொண்டது தெரியவந்ததை அடுத்து ஜூலை 10, 2023 வரை அவர் விளையாட தடை விதிப்பதாக சர்வதேச சோதனை முகமையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹைஜெனமைன் எனும் ஊக்கமருந்து உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் தடைசெய்யப்பட்ட பட்டியலில், பீட்டா-2 அகோனிஸ்ட்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் ஊக்கமருந்து எதிர்ப்பு இலக்கியத்தின்படி, ஹைஜெனமைன் ஒரு பொதுவான தூண்டுதலாக செயல்படுகிறது.

    இது நுரையீரலுக்கு அதிக ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது போட்டியிலும் வெளியேயும் விளையாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தன் மீதான தடை குறித்து கர்மாகர் தரப்பிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

    தீபா கர்மாகர்

    ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் பின்னணி

    திரிபுராவைச் சேர்ந்த கர்மாகர் முதன்முதலில் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முக்கிய இடத்தைப் பிடித்து, அனைவரும் அறிந்த வீராங்கனையானார். காமன்வெல்த்தில் அவர் வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார்.

    அடுத்து 2016 ஆம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக்கில் 4வது இடத்தைப் பிடித்தார். அதன்பிறகு உலகக் கோப்பைப் பதக்கம் வென்றார்.

    கர்மாகர் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு 2018 ஆம் ஆண்டு முதல் சிகிச்சையில் இருந்தார்.

    சர்வதேச சோதனை முகமை 11.10.2021 இல் சோதனையை மேற்கொண்ட பிறகு, அவர் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

    இந்நிலையில், சோதனை செய்யப்பட்ட தேதியிலிருந்து 21 மாதங்கள் கணக்கிடப்பட்டு ஜூலை 10, 2023 வரை தடை விதிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பச்சை பட்டுடன், பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர் மதுரை
    கோடை வெயிலை சமாளிக்க சோடா, எனர்ஜி ட்ரிங்க் அடிக்கடி குடிப்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை ஆரோக்கியமான உணவுகள்
    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இந்தியா

    புதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை மாருதி
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை பட்ஜெட் 2023
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025