சதுரங்க போட்டியில் உலக சாம்பியனை தோற்கடித்து இந்தியாவின் நம்பர் 1 அந்தஸ்தை பெற்றார் பிரக்ஞானந்தா
விஜ்க் ஆன் ஜீயில் (நெதர்லாந்து) நடந்த டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் நான்காவது சுற்றில், இந்திய செஸ் சூப்பர் ஸ்டார் ஆர்.பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்தார். செவ்வாய் இரவு நடைபெற்ற இந்த போட்டியில், பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு, FIDE லைவ் ரேட்டிங்கில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாத் ஆனந்தின் 2748 புள்ளிகளுக்கு எதிராக 18 வயதான பிரக்னாநந்தா 2748.3 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம், விஸ்வநாத் ஆனந்துக்குப் பிறகு, கிளாசிக்கல் செஸ்ஸில் நடப்பு உலக சாம்பியனை தோற்கடித்த இரண்டாவது இந்தியரானார் பிரக்ஞானந்தா. இந்த வெற்றியானது, பிரக்ஞானந்தாவை, விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை முறியடித்து, சிறந்த தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.