NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கேமரூனில் ஓட்டப்பபந்தயத்தில் குண்டுவெடிப்பு : 19 வீரர்கள் படுகாயம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேமரூனில் ஓட்டப்பபந்தயத்தில் குண்டுவெடிப்பு : 19 வீரர்கள் படுகாயம்!
    கேமரூனில் நடந்த ஓட்டப்பபந்தயத்தில் குண்டுவெடித்ததில் 19 வீரர்கள் படுகாயம்

    கேமரூனில் ஓட்டப்பபந்தயத்தில் குண்டுவெடிப்பு : 19 வீரர்கள் படுகாயம்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 25, 2023
    06:57 pm

    செய்தி முன்னோட்டம்

    கேமரூன் நாட்டில் ஒட்டப்பந்தய போட்டி நடந்து கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததில் 19 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கேமரூனின் மேற்கு பகுதியில் ஆங்கில மொழி பேசும் பிரிவினைவாதிகள் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் ஒன்றில் 529 விளையாட்டு வீரர்கள் மவுண்ட் கேமரூன் ரேஸில் போட்டியிட்டனர்.

    இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோனோர் கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    அவர்களுக்கு கேமரூன் பாதுகாப்பு படைகள் முழுமையான பாதுகாப்பு வழங்கியது. இந்நிலையில் ஓட்டப்பந்தயத்தில் வீரர்கள் ஓடிக்கொண்டிருக்கையில் ஆங்காங்கு பல இடங்களில் சிறிய அளவிலான குண்டுகள் வெடித்துள்ளன.

    குண்டுவெடிப்பு

    கேமரூன் ராணுவத்தை குறிவைத்து நடந்த தாக்குதல்

    பிரிவினைவாத போராளிக் குழுக்களில் ஒன்றான அம்பாசோனியா ஆளும் குழுவின் ஆயுதப் பிரிவு இந்த குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுள்ளது.

    "எங்கள் முதன்மை இலக்கு கேமரூன் உயரடுக்கு படைகள். அது விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. கேமரூன் ஆக்கிரமிப்பைத் தொடர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்று குழுவின் செய்தித் தொடர்பாளர் கபோ டேனியல் கூறியுள்ளார்.

    பிரிவினைவாத கிளர்ச்சியானது 2016ஆம் ஆண்டு கேமரூனின் ஆங்கிலம் பேசும் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியங்களில் ஆரம்பமானது.

    முதன்மையாக பிரெஞ்சு மொழி பேசும் தேசிய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆசிரியர்களும் வழக்கறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்தபோது இது தொடங்கியது.

    ராணுவத்தின் ஒடுக்குமுறை கிளர்ச்சியை தீவிரமாக்கியது. மேலும் அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உலகம்

    மாதவிடாய் விடுப்பை அங்கீகரித்த ஸ்பெயின் உலக செய்திகள்
    இந்திய மீட்பு படைக்கு கைதட்டி தங்கள் நன்றிகளை தெரிவிக்கும் துருக்கி மக்கள் துருக்கி
    100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம் இங்கிலாந்து
    வியட்நாமிற்கு சுற்று பயணம் செய்ய போகிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் சுற்றுலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025