NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஒலிம்பிக் 2024: பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றார் மனு பாக்கர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒலிம்பிக் 2024: பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றார் மனு பாக்கர் 

    ஒலிம்பிக் 2024: பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றார் மனு பாக்கர் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 28, 2024
    04:05 pm

    செய்தி முன்னோட்டம்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளில், இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றுள்ளார்.

    பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் வரலாறு படைத்துள்ளார்.

    ஹரியானாவைச் சேர்ந்த 22 வயது பெண்ணான மனு பாக்கர் துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டி பிரான்ஸ் தலைநகரில் உள்ள சாட்டௌரோக்ஸ் சுடுதல் மையத்தில் நடைபெற்றது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றார் மனு பாக்கர் 

    Manu Bhaker has scripted history by winning India's first medal at #Paris2024!

    Shooter Manu Bhaker wins bronze medal in Women’s 10 M Air Pistol.@IndiaSports @Paris2024 #Breaking#Paris2024   #Olympics  #ParisOlympics #ManuBhaker pic.twitter.com/Zjb5RNSxCL

    — DD News (@DDNewslive) July 28, 2024

    இந்தியா 

    துப்பாக்கிச் சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் 

    மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் திறமையான துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவரான மனு பாக்கர் தனது கனவுகளை நிறைவேற்றி, தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    12 ஆண்டுகளுக்கு பிறகு, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா பதக்கத்தை வென்றுள்ளது.

    அபினவ் பிந்த்ரா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விஜய் குமார் மற்றும் ககன் நரங் ஆகியோருக்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஐந்தாவது வீரர் என்ற பெருமையை மனு பெற்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒலிம்பிக்
    இந்தியா

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    ஒலிம்பிக்

    Sports Round Up : 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; இந்திய கால்பந்து அணி தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் கிரிக்கெட்
    Sports Round Up : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா; பிவி சிந்து அரையிறுதியில் தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி இந்தியா
    2028 ஒலிம்பிக் போட்டி - புதிதாக 5 விளையாட்டுகள் சேர்ப்பு  கிரிக்கெட்

    இந்தியா

    0001 எனும் ஃபேன்ஸி கார் நம்பர் 23 லட்சத்துக்கு விற்பனை: வேறு எந்த எண்கள் அதிக தேவையில் உள்ளன? போக்குவரத்து
    மும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது  மும்பை
    'அப்பாவி குழந்தைகளின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது': உக்ரைன் போரை நிறுத்த கோரினார் பிரதமர் மோடி  ரஷ்யா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்டரை தொடங்கியது பாதுகாப்புப் படைகள்  ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025