LOADING...
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு வெள்ளிப் பதக்கம்!
2025 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் மீராபாய்

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு வெள்ளிப் பதக்கம்!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 03, 2025
09:25 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, நார்வேயின் ஃபோர்டேயில் நடைபெற்ற 2025 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று மீண்டும் முத்திரை பதித்துள்ளார். இதன் மூலம், உலகப் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சானு பெறும் மூன்றாவது பதக்கம் இதுவாகும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் களமிறங்கிய சானு, ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கினார். நடப்பு சாம்பியனான வட கொரியாவின் ரி சாங்-கம் (Ri Song-gum) 213 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். தாய்லாந்தின் தான்யாதோன் சுக்சரோயன் (Thanyathon Sukcharoen) 198 கிலோவுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

செயல்பாடு

சானுவின் செயல்பாடு

முதலில் சானு 84 கிலோவை தூக்கி சிறப்பாகத் தொடங்கினார். எனினும், 87 கிலோவை தூக்குவதற்கான அவரது அடுத்த இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்தன. ஸ்னாட்ச்சில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, கிளீன் அண்ட் ஜெர்க்கில் சானு அபாரமாக செயல்பட்டார். அவர் முதலில் 109 கிலோவையும், பிறகு 112 கிலோவையும், மூன்றாவது முயற்சியில் 115 கிலோவையும் வெற்றிகரமாகத் தூக்கி, தனது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். 2017-ஆம் ஆண்டு அனஹெய்மில் தங்கம் வென்ற பிறகு, சானு ஐந்து ஆண்டுகள் கழித்து உலகப் போட்டிகளில் மீண்டும் மேடைக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு அவர் பங்கேற்ற இரண்டாவது பெரிய போட்டி இது.